tamilnadu

img

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுக!

சென்னை, பிப். 14-  மருத்துவத்துறையில் காலியாக உள்ள 3000க்கும் மேற்பட்ட அனைத்து நிலை  நிர்வாக ஊழியர் பணியி டங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவ்வாயன்று (பிப். 14) பெருந்திரள் முறை யீடு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலத் தலைவர் எம்.பி.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் துவக்கி  வைத்தார்.

பொதுச் செய லாளர் இரா.ந.நம்பிராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.ஏழுமலை, தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோ சியேசன் பொதுச் செயலா ளர் ஈஸ்வரன், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.சண்முகம், எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ம.நே.சுபின், மருத்துவத்துறை தொழில்நுட்ப ஊழியர்  சங்கத்தின் பொதுச் செயலாளர் ம.அந்தோணி சாமி, கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் க. அன்பழகன், அரசு ஊழியர்  சங்க சென்னை மாவட்ட  நிர்வாகிகள் வே.விஜய குமரன், மா.செந்தில்குமார், கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் வி.ராணி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

அத்தியாவசியத் துறை யாக விளங்கும் மருத்துவத் துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாக ஊழி யர்களுக்கு கடந்த 4 ஆண்டு களாக பதவி உயர்வு வழங் கப்படாமல் உள்ளதை உடன டியாக வழங்க வேண்டும்  என்றும் காலிப் பணியிடங் களை காலமுறை ஊதி யத்தில் நிரப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த கோரிக்கைகள் குறித்து பலமுறை சுகாதாரத் துறை செயலா ளர், இயக்குநர், அமைச்சரி டம் பேசியும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற வழக்கை மட்டுமே  காரணம் காட்டி வருகிறார் கள். எனவே, அடுத்த கட்ட மாக அனைத்து சங்கங்களை யும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர்.