கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததாலும் வெப்பநிலை உயர்வு காரணமாகவும் மீன்கள் இறந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் ஒரே பசுமை மண்டலத்தின் மக்கள், மீன் பிடிப்பவர்கள், விவசாயிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தற்போதுள்ள ஊரடங்கு நீக்கத்திற்கு பிறகு தங்களது வாழ்வாதாரத்தை பற்றி கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் தான் பொதுப்பணித்துறை இந்த அணையின் மதகுகளை சரி செய்யும் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.