தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை இராமநாதபுரம், ஜன.20- இராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனம் மற்றும் மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு ஆகியோர் கூறி யதாவது: 2024-2025 நடப்பு ஆண்டு சுமார் 3.30 லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் நடைபெற் றுள்ளது. இந்த ஆண்டு இது வரை இல்லாத அளவிற்கு ஆரம்ப கட்டத்தில் கூடுத லான மழை பெய்தது. மேலும் பருவமழை உரிய நேரத்தில் பெய்ததாலும், வைகை தண் ணீர் கிடைத்ததன் விளைவாக வும் கண்மாய்களில் நீர் நிரம் பியுள்ளன. இதனால் தற் போது மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள் ளது. இந்நிலையில் தற்போது கடந்த 13 ஆம் தேதி முதல் பெய்த தூறல் மழை, கன மழையால் மாவட்டம் முழு வதும் அறுவடைக்கு தயா ராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் சில பகுதிகளில் தரையோடு சாய்ந்தும் பாதிக்கப்பட்டுள் ளன. தொடர்ந்து பருவமழை பெய்தும் நடப்பாண்டு நெல் விவசாயம் ஆரம்பம் முதலே கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக, புஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சுமார் 30 ஆயி ரம் ஹெக்டேர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிடுக! தற்போது திரு வாடானை, ஆர்.எஸ்.மங்க லம், சிக்கல் ஆகிய பகுதி களில் அறுவடை துவங்கி யுள்ளது. இந்நிலையில் மழை சூழலை பயன்படுத்தி அறுவடை இயந்திர உரிமை யாளர்கள் மற்றும் பகுதியில் உள்ள ஏஜெண்டுகள் அறு வடைக்கு அதிகமான வாடகை வசூல் செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அறுவடை இயந் திர வாடகையை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.