புதுதில்லி, நவ.16- ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைப் பிரிவை மீண்டும் திறக்க உத்தர விட வேண்டும் என்று வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடி யாக தள்ளுபடி செய்தது. முன்னதாக, வேதாந்த குழும மானது, தங்களின் மறு ஆய்வு மனுவை, திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலை யில், அந்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழல் மாசுபட்டது. இரசாயன கழிவுகள் மற்றும் நச்சுக்காற்றால் பொது மக்களும் கால்நடைகளும் பாதிக் கப்பட்டனர். இதனால், ஆலையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், அப்பகுதி மக்க ளும் பல்வேறு கட்டப் போராட் டங்களை நடத்தினர். இந்நிலையில் கடந்த 22.5.2018 அன்று எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அதிமுக ஆட்சியின் போது, பொதுமக்கள் ஒன்று திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க முயன்றபோது, அந்தப் போராட்டத்தை சீர்குலைத்த காவல் காவல்துறையினர் துப்பாக் கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த னர். இது தமிழகத்தையே உலுக்கி யது. இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசா ரணையை துவக்கிய சிபிஐ, தூத் துக்குடி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கையே அடிப்ப டையாக எடுத்துக்கொண்டது. ஆனால், இதற்கு ஆட்சேபம் தெரி வித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், 29.5.2018 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் அளித்த விரிவான புகார் மனு வின் அடிப்படையில், புதிதாக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தர விட்டது.
இதற்கிடையே, கடந்த 2018 மே 28 அன்று ஸ்டெர்லைட் ஆலை யை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதி ராக வேதாந்தா குழுமம் சென்னை உயர்நீதிமன்றம் சென்ற நிலையில், ‘தமிழ்நாடு அரசின் முடிவு சரியா னது’தான் என்றும், ‘ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது’ என் றும் 2020 ஆகஸ்ட்டில் தீர்ப்பளித் தது. இதையடுத்து வேதாந்தா குழு மம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது எனவும், தமிழ்நாடு அரசு ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அர சின் முக்கியமான வேலைகளில் ஒன்று” என கடந்த 2024 பிப்ரவரி 29 அன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவே முடியாது என்ற நிலை உருவானது. எனினும், தனது முயற்சியைக் கைவிடாத வேதாந்தா குழுமம், உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று புதிய மனுவைத் தாக்கல் செய்தது. தங்களின் மனுவை திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வாதங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யது. ஆனால், “இந்த வழக்கைப் பொறுத்தவரை, தங்களின் தீர்ப்பை மறு விசாரணைக்கு உட்படுத்து வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை; மறு ஆய்வுக்கான ஏற்கத் தக்க காரணங்களாக எதுவும் நிறு வப்படவில்லை” என்று கூறி, மறு ஆய்வு மனுவையே டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு (நவம்பர் 10) அன்று தள்ளுபடி செய்துள்ளது. மனுவை திறந்த நீதிமன்றத்தில் பட்டியலிட வேண்டும் என்ற கோரிக் கையையும் நிராகரித்துள்ளது. “ஒரு தொழில்துறையை மூடு வது நீதிமன்றத்தின் விருப்பம் அல்ல. இந்த தொழிற்சாலை நாட்டின் உற்பத்தித் துறைக்கு பங்க ளித்துள்ளது. குறிப்பிட்ட பகுதி யில் வேலைவாய்ப்பு மற்றும் வரு வாய் ஆதாரத்திற்கும் உதவியி ருக்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் விதிகளை தொடர்ச்சியாக மீறி வரும் நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியமே முக்கியமானது என்ற அடிப்படை யில், மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.