மதுரை, மே 20- கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று உலக சுகாதார நிறுவனம் அறி வித்துள்ள நிலையில். தற்போது இந்தியா வில் அனைத்து மாநிலங்களிலும் முகக் கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டா யமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமி ழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊர டங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தங்களுடைய பணிகளுக்காக தற்போது வெளியில் சென்று வருகிறார் கள். இந்த நிலையில் முகக் கவசம் அணிந்து வராத நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்று கூறி மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதனன்று இருசக்கர வாக னங்களில் வரும் நபர்களை நிறுத்தி அப ராதம் விதித்துள்ளது.
இதில் பலரும் பணிக்குச் செல்ல வேண்டிய அவசர நிலை யில் அபராதம் செலுத்திய ரசீதுகளைக் கூட பெற்றுக்கொள்ளாமல் செல்கிறார்கள். நோய்த்தொற்று பரவல் நேரத்தில் தமிழக அரசு நோய் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் பெரும் பொருளாதார நெருக்கடி யில் சாப்பாட்டுக்கு வழியின்றி நோயை எதிர்த்து எப்படி வாழ்வது என்ற சூழ்நிலை யில் குறைந்தபட்சம் 20 ரூபாய் கொடுத்து முகக் கவசம் வாங்க முடியாத சூழ்நிலை யில் தான் மக்கள் உள்ளார்கள். இப்படி அபராதம் விதிக்கும் மாநகராட்சி நிர்வாகம் குறைந்த விலையில் முகக்கவசங்களை மக் களுக்கு வழங்கிட வேண்டும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், மாநகராட்சி மக்கள் நலனுக்காக பல் வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக் கள் பாதுகாப்புக்கென்று முகக் கவசங்கள் வழங்கவோ அதற்கான ஏற்பாடுகளோ இல்லை. குறைந்தபட்சம் ஒரு முகக் கவ சம் பத்து ரூபாய் என்று வைத்தாலும் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு தினசரி 3 அல்லது 4 முகக் கவசங்கள் வாங்க வேண்டும். இதற்கு ஐம்பது ரூபாய் வரை செலவாகிறது. ஏற்கனவே மக்கள் வேலை யின்றி பெரும் சிரமத்தில் உள்ள நிலை யில் ஐம்பது ரூபாய் கொடுத்து. குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு முகக்கவசங்களை வாங்க முடியுமா என்பது கேள்விக்குறி யாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த அபராதம் தொகையை பெற்றுக் கொண்டு விலைக்கு முகக்கவசங்களை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தினால் பாராட்டுக்குரிய விஷயமா கும் என்றனர்.