tamilnadu

200க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதி மறுப்பு: கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இராஜபாளையம், பிப்.20-  விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் 2 மற்றும் 3-ஆவது வார்டு வாக்கு மையத்தில் மாலை  4-45 மணிக்கு வாக்களிக்க வந்தவர்க ளை அனுமதிக்க மறுத்ததால் சாலை  மறியல் போராட்டம் நடத்தினர்.  விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் வார்டு எண் 2 மற்றும் 3  வாக்கு மையம் என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. மாலை 4 -45 மணி அளவில் மில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழி லாளர்கள் 200 பேர் வரை வாக்க ளிக்க காத்திருந்தனர்.  மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்ட தால், வாக்கு மையக்  கதவு மூடப்பட்டது. இதனால், வாக்களிக்க வந்தவர்கள் வாச லில் நின்ற அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். பின்னர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்ட னர். உடனடியாக   இராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.