விருதுநகர், ஜன.12- விருதுநகர் சந்தையில் காபி வகைகளின் விலை வர லாறு காணாத வகையில் பெரும் உச்சத்தைத் தொட்டது. மேலும், நாடு வத்தல், மல்லி, துவரை, உருட்டு உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய வற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. பாமாயில், மஞ்சள் மசூர் பருப்பு ஆகிய வற்றின் விலை சற்று குறைந் துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2180 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.30 மட்டும் குறைக்கப்பட்டு தற்போது ரூ.2150 என விற்பனையாகிறது. வத்தல் நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.1000 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மல்லி 40 கிலோ லையன் வகை கடந்த வாரம் ரூ.3,550 முதல் ரூ.3,650 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்துள்ளது. எனவே, ரூ.3,650 முதல் ரூ.3750வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ ரூ.10,500 என விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்ந்துள்ளது. எனவே, குவிண் டால் ரூ.10,700க்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.9,800க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.400 வரை உயர்த்தப் பட்டு, தற்போது ரூ.10,200க்கு விற்கப் படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு கடந்த வாரம் ரூ.9,400 என விற்ற நிலையில், ரூ.400 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.9,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளைப் பட்டாணி 100 கிலோ கடந்த வாரம் ரூ.4ஆயிரம் முதல் ரூ.4,100 வரை விற்ற நிலையில் தற்போது ரூ.100 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.4,100 முதல் ரூ.4,200 வரை விற்கப் படுகிறது. மஞ்சள் மசூர் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.15 ஆயிரம் என விற்ற நிலையில், தற்போது மூட்டைக்கு ரூ.200 குறைந்து ரூ.14,800க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு குவிண்டால் ரு.9,500 முதல் ரூ.9,750 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 வரை உயர்த்தப் பட்டு, தற்போது ரூ.9,700 முதல் ரூ.9,950 வரை விற்பனையாகிறது.
உச்சத்தில் காபி விலை
காபி வகைகளின் விலை திடீரென வரலாறு காணாத வகையில் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், தேநீர் விற்ப னைக் கடை உரிமையாளர்கள் பெரும் பாதிப்படையும் நிலை உள்ளது. ஏற்கனவே, தனியார் பாலின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது, காபி வகை களின் விலையும் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தேநீர் மற்றும் காபி கடை உரிமை யாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஏற்கனவே, ஒரு குவளை தேநீரின் விலை குறைந்தபட்சம் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. ஒரு குவளை காபி விலை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தற்போது இந்த விலை உயர்வின் காரணமாக, ஒரு குவளை காபி விலையை மேலும் உயர்த்தினால், கடைக்கு வாடிக்கை யாளர்கள் வருவது குறைந்து, வியா பாரம் பெருமளவு பாதிக்கப்படும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காபி விலைகளின் விபரம் வருமாறு:
காபி பிளாண்டேசன் பி,பி 50 கிலோ கடந்த வாரம் ரூ.24,100க்கு விற்கப்பட்டது. ரூ.5 ஆயி ரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே தற்போது ரூ.29,100க்கு விற்கப்படு கிறது. இதேபோல் “ஏ வகை” காபி பிளாண்டேசன் விலை ரூ.24,750 என இருந்தது. தற்போது ரூ.5,250 வரை உயர்த்தப்பட்டு ரூ.30,100க்கு விற்கப்படுகிறது. “சி வகை” காபி பிளாண் டேசன் ரூ.23,100க்கு விற்கப் பட்ட நிலையில் ரூ.4,900 வரை உயர்த்தப்பட்டு தற்போது 28 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது. மேலும், “ரோபஸ்டா பிபி” வகை காபி 50 கிலோ கடந்த வாரம் வரை ரூ.21 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் திடீரென ரூ.3 ஆயிரம் உயர்ந்து தற்போது ரூ.24ஆயிரத்திற்கு விற்கப் படுகிறது. இதேபோல் “பிளாக் பிரவுன்” வகை காபி 50 கிலோ கடந்த வாரம் ரூ.21 ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.500 உயர்ந்து ரூ. 21,500க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரே நேரத்தில் வத்தல், பருப்பு வகைகள் மற்றும் காபி வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர். எனவே, ஒன்றிய- மாநில அரசுகள் உடனடியாக இந்த விலை உயர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும், அத்தி யாவசியப் பொருட்கள் சட்டத்தை கடு மையாக அமல்படுத்த வேண்டும் எனவும், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பதுக்கி வைத் துள்ள உணவுப் பொருட்களை வெளியே கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.