tamilnadu

கேடுகெட்ட ஆணாதிக்கவாதி சீமானின் வாய்க் கொழுப்பு!

கேடுகெட்ட ஆணாதிக்கவாதி சீமானின் வாய்க் கொழுப்பு!

சீமான் தொடர்ந்து பேசும் பேச்சுக்கள் பண்பற்ற அரசியல்வாதியாக அவரை அடையாளம் காட்டி வரு கின்றன. பல சந்தர்ப்பங்களில், இதைச் செய்ய ஓர் ஆண்மகன் உண்டா, அதைச்  செய்ய தைரியம் உள்ள ஆண்மகன் எங்கே என்ற மொழியில் அவர்  பேசிக் கேட்டிருக்கிறோம். துணிச்சலுக்கு இலக்க ணமாக எத்தனை பெண்கள் வரலாறு நெடுகிலும் இருந்துள்ளனர் என்பது அவர் அறியாததல்ல. ஆனால் அவர் அப்படித் தான் பேசுவார். ஏனெனில் ஆண் மேலாதிக்கக் கருத்தியலே அவரது  அரசியல். அவரது கட்சி உறுப்பினர் களையும் அதே பாணியில் வளர்த்து வரு வது தான் நமக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. அதை விட அநீதி, அவரது குற்றங்களையும், சுய சீரழிவையும் தம்  கட்சியின் பிரச்சனையாக மாற்றி யிருப்பதுதான். விஜயலட்சுமி புகாரின் அடிப்படை யில், காவல்துறையால் பாலியல் வல்லு றவு குற்றம் சாட்டப்பட்டு நிற்பவர் சீமான்.  நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய  மறுத்து விட்டது. இப்போது அவர் வழக்கை சந்திக்கத் தான் வேண்டும். ஆனால் அனைத்துப் பாலியல் வழக்கு களையும் போலவே, விஜயலட்சுமி தூற்றப் படுவதும், சீமான் நெஞ்சை நிமிர்த்தி வலம் வருவதும் வாடிக்கையாகி வரு கிறது.  ஆஜராக மாட்டேன் என சவால் விடு வதும், இறுமாப்புடன் பேசுவதும் ஊட கங்கள் முன்னால் நடந்து கொண்டே உள்ளது. இதை ஒட்டி அண்மையில் சீமான் அளித்த ஊடகப் பேட்டிகள், கடைந் தெடுத்த ஆணாதிக்கத்தின் உச்சம்.

யார் கற்பிழந்தவர்?

கற்பழிப்பு’ என்ற வார்த்தையை மிக லேசாக சீமான் பயன்படுத்துகிறார்.  வல்லுறவு செய்யப்பட்ட பெண் எப்படி கற்பு   இழந்தவராக முடியும்?  இதற்கும் கற்புக் கும் என்ன தொடர்பு? நடந்தது உண்மை  எனில் சீமான் தான் கற்பை இழந்தவர்,  ஏமாற்றப்பட்ட விஜயலட்சுமி அல்ல.  ஆணுக்குக் கற்பு இல்லை என்று கருது கிற ஆணாதிக்க  அவதாரங்களுக்கு இது  புரியாது தான்.  வல்லுறவு செய்யப்பட்ட பெண் கறை படிந்தவள் என்ற கட்டுக் கதைக் குப்பைகளில் இன்னும் அமிழ்ந்து  கிடக்கிறாரோ என்னவோ..! 7 முறை கரு கலைத்த சாதனை யாளராக நான் தான் இருக்க முடியும் என்று சொல்வதும், அப்போதைய உடல் மொழியும், நமட்டு சிரிப்பும் பெண்ணை வெறும் பாலியல் பண்டமாகப்   பார்க்கும் கண்ணோட்டத்தை அம்பலப் படுத்துகிறது. இவருக்குப் பின்னால் உள்ள இளைஞர்களும் இந்த வழியில் சென்றால், தமிழ்நாடு என்ன ஆகும் என்கிற பதற்றம் வருகிறது. திரும்பத் திரும்பக் கரு கலைப்பு செய்தால், பெண்ணின் உடலும், மனமும் ரணமா கும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இப்போது தான் வயதுக்கு வந்த பெண்ணுக்கு (puberty) இது நேர்ந்தது போல் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்று  கேட்கிறார். துணிச்சல் இருந்தால் இந்தக்  கேள்வியை கனம் கோர்ட்டாரிடம் கேளுங் கள் மிஸ்டர் சீமான். நன்றாகவே ‘பதில்’ கிடைக்கும். சட்டங்களும் சமூகமும் வெகுவாக முன்னேறிய பின்னும், சீமான்  மட்டும் அனைத்திலும் பின்னோக்கிப் போகிறார், மிகவும் பிற்போக்காக சிந்திக் கிறார். அவரது வாதத்தின்படி, திருமண மான பெண்ணை வல்லுறவு செய்தால் குற்றம் இல்லை, திருமணமாகாமலே பரஸ்பரம் சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பெண்ணை யார் வேண்டு மானாலும் வல்லுறவு செய்யலாம் என்ற  பொருள் வருகிறது. என்ன அபத்தம் இது?  பாலியல் வல்லுறவு வழக்கில் சம்பந்தப் பட்ட பெண்ணின் கடந்தகால பாலியல் நடத்தை (previous sexual history) குறித்த கேள்விகளுக்கு இடமில்லை என சட்டத்திருத்தங்கள் வந்து பல பத்தாண்டு களாகின்றன. ஒரு கதையில் வரும் ‘ரிப்  வேன் விங்கிள்’ போல சீமான் பல்லாண்டு  உறக்கத்தில் இருந்து விட்டாரா? “பெண் ணின் சம்மதமின்றி நடப்பது மட்டுமல்ல,  அந்த சம்மதம் பொய்யான வாக்குறுதி அடிப்படையில் பெறப்பட்டால் அது சம்மதம்  என்ற கணக்கில் வராது, எனவே வல்லு றவு” எனவும் சட்டம், விளக்கம் அளிக் கிறது. விஜயலட்சுமி விரும்பித் தான் தன்னுடன் ஈடுபட்டார் என்ற சீமானின் வாதம் இதில் முழுதாக அடிபட்டுப் போய் விடுகிறது. முதன் முதலாக  மாதவிடாய் ஏற்பட்ட வர் என்றால் பெரும்பாலும் சிறுமியாகத் தான் இருக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா சீமான்… சிறுமியை வல்லுறவு  செய்யும் குற்றம், போக்சோ பிரிவுகளின் கீழ் வரும்.

12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறு மியை வல்லுறவு செய்வது, மரண தண்ட னைக்குரிய கடும் குற்றமாகும். இப்பேர்ப் பட்ட வன்கொடுமையை வாய் கொழுப் பாகப் பேசுவதே குற்றம். தனது மகன் என்ன நினைப்பான் என ஒரு தந்தையாகக் குமுறுகிறார். வாய்க்கு வந்தபடி பேசும் போது, தன் தம்பிகளுக்கு மிகத் தவறான முன் மாதிரியாக நடந்து கொள்ளும்போது இதை யோசித்து இருக்க வேண்டாமா? தமிழ் தேசியத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்தும் சீமானின் இப்படிப்பட்ட பேச்சுகளை,  தமிழ் தேசிய  ஆதரவாளர்கள் ஏற்கிறீர்களா?   மார்க்சியம் பாலின சமத்துவத்தை முன்வைக்கிறது.  மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்திலும், அமைப்பு விதிகளிலும் அத்தகைய உள்ளடக்கம் இருக்கிறது. தமிழ் தேசிய கருத்தியலில் பெண்ணிற் கான இடம் எங்கே? இவரது கட்சியில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?  கூட நின்ற கட்சியின்  பெண்  நிர்வாகிகளில் ஒருவருக்குக் கூடவா கோபம் வரவில்லை? சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த கேடு கெட்ட ஆணாதிக்கத்திற்குத் தான் துணை  போகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா? இத்தகைய ஆணாதிக்க, நெறியற்ற,  சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்புகள் வெளிப்பட வேண்டும்

 - உ.வாசுகி