tamilnadu

img

உழைக்கும் மக்கள் உரிமைப் போராட்டத்தில் மாற்றுச் சக்தியாக மார்க்சிஸ்ட் கட்சி திகழும்

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் முழக்கம்

விழுப்புரம், (சீத்தாராம் யெச்சூரி அரங்கம்) ஜன. 4- உழைக்கும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் மாற்றுச் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும் என விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் முழங்  கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை வரு மாறு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்பு ரம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இன்று  செங்கொடி இயக்கத் தோழர்களால் நிறைந் துள்ள காட்சியை பார்க்க முடிகிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் தங்கள்  உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கும் கட்சி.

அண்ணாமலையின் நாடகம்

இன்றைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்கிறார். திமுக  ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை செருப்பு  போடமாட்டேன் என்கிறார். 48 நாட்களுக்கு விர தம் இருந்து ஆறுபடை முருகப்  பெருமானிடம் சென்று முறையிடப் போகிறேன் என்று கூறு கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாண விக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி திடீரென பேசுகிறார் அவர். பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நடக்கிறபோது, அதை தட்டிக் கேட்கும் கடமை எல்லோருக்கும் உள்ளது. தமிழகத்தில்  எந்த மூலையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும்,  அங்கே ஓடி சென்று அவர்களுக்காக குரல்  கொடுக்கிற இயக்கம் செங்கொடி இயக்கம்தான். பல்கலைக்கழக மாணவிக்காக அப்படி கொதிக்கும் நீங்கள் (அண்ணாமலை) பொள்  ளாச்சியில் இப்படிப்பட்ட கொடுமை நடந்த போது எங்கு சென்றீர்கள்? ஏன் அப்போது கொதிக்கவில்லை? பொள்ளாச்சி கொடுமை யில் தமிழ்நாடு கொந்தளித்த போது அதிமுக வோடு கூட்டணியில் இருந்தீர்கள். எனவே பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசவில்லை. அன்றைக்கு ஆட்சியைக் கலைக்க வேண்டும்  என்று நீங்கள் கூறவில்லை. உங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்படும் பெண்கள் மீது  இழைக்கப்படுகின்ற கொடுமை, முக்கியமல்ல; குறுகிய அரசியல் தான் முக்கியமாக இருக்கி றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவின் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்  டோம். ஆர்எஸ்எஸ் - பாஜக முயற்சி தமிழகத்தில்  வெற்றி பெறாது.

மக்களின் உரிமைகள் முக்கியம்

அதேபோல், தமிழ்நாட்டு அரசியல் நிலை யைப் பொறுத்தவரை, பாஜகவை வீழ்த்துகிற  போராட்டத்தில் திமுகவுடன் உறுதியாக இருக்  கின்றோம். இந்த நாட்டின் அரசியல் சாச னத்தை வீழ்த்துவதற்கு எதிரான போராட்டத்தி லும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகவும் நடத்துகின்ற போராட்டத்தில் இணைந்து கை கோர்ப்போம். ஒன்றிய அரசை எதிர்த்து நடத்து கின்ற போராட்டத்தில் எல்லாம் உங்களுடன் இணைந்து களம் காணுகின்ற நாங்கள், திமுக  அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள்,  மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற திட்டங்களாக இருக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம்.

ஜனநாயக உரிமைகளை பறிப்பதா?

தமிழ்நாட்டில் சாதாரணமாக கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட காவல்  துறை வழக்கு போடுகிறது. தெருமுனைக் கூட்  டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று சொன்னால்;  போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. காவல்துறை ஏன் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறுகிறது. ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கிறோம், ஊர்வ லத்திற்கு அனுமதி மறுத்து விட்டீர்கள். குறைந்த பட்சம் செந்தொண்டர் பேரணிக்காவது அனுமதி  கேட்கிறோம். கடைசி வரை தருகிறோம் என்று இழுத்தடித்து கடைசி நேரத்தில் அனுமதி மறுக்  கப்பட்டது என்ற கடிதத்தை முதல் நாள் மாலை  கொடுக்கிறீர்கள். இது என்ன நியாயம்? தமிழ்  நாட்டில் ஊர்வலம் நடத்தக் கூடாதா? மக்கள்  இயக்கங்கள் நடத்தக் கூடாதா? பாதிக்கப்படு கிற மனிதர் உரிமைக்காக போராடக் கூடாதா?  எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சி களும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். போராட்டங்களைக் கண்டு  அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஆர்ப்பாட்ட  அனுமதியை ரத்து செய்து, கைது செய்து விட்டால் அவர்களை முடக்கி விட முடியுமா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்  கொள்ள வேண்டும். ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இடதுசாரிப் பாதையை ஒருங்கிணைப்போம்

இந்தியாவில் பல்வேறு மாடல்கள் முன்  மொழியப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் சொல்லிக் கொள்கின்றோம்...  இந்தியாவிற்கான சிறந்த மாடல் என்று சொன்  னால் அது இடதுசாரி மாடலாகத்தான் இருக்க  முடியும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடது சாரி பாதையை ஒருங்கிணைக்கும் மகத்தான  பணியை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்.  பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில் திமுக வுடன் இணைந்து தயக்கமில்லாமல் பணியாற்று வோம்; ஆனால் திமுக அரசு தொழிலாளர்கள் உரிமையைப் பறிக்கும் போது, விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் போது, அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்ற தவறுகிறபோது, இன்னும்  இருக்கிற உழைப்பாளி மக்கள் பிரச்சனைகளை  நிறைவேற்ற காலம் கடத்துகிற போது, அந்த உரி மைகளை மீட்டு எடுக்கும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயமாக களம்  காணும், போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாஜகவை வீழ்த்த நினைக்கும் நாம் அனை வரும், மக்களுடைய ஆதரவை இழந்து விட்டு  பாஜகவை வீழ்த்த நினைத்தால் அது முடியாது.  மக்களுடைய கோரிக்கைகளை, விவசாயி களின் கோரிக்கைகளை, பெண்களுடைய கோரிக்கைகளை, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  வலுவான போராட்டங்களை நடத்தி அவர்களை  வென்றெடுக்க வேண்டும்.

இது என்ன நியாயம்?

வேறு ஏதாவது திட்டத்தை கேட்டால் நிதி  இல்லை என்கிறீர்கள். ஆணவப் படுகொலை யை தடுக்கச் சட்டம் போட்டால் என்ன? இதற்கு  பேப்பர் செலவு மட்டும் தான். அதை நிறைவேற்ற  முடியாது என்று சொன்னால் என்ன நியாயம்? பட்டியலின மக்கள் மீது இழைக்கப்படுகிற கொடு மைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மகத்தான  பொறுப்பு நம்முன் உள்ளது.

மக்களின் உரிமைக்குரலாக...

எனவே, பாஜகவை வீழ்த்துகிற போராட் டத்தில் தமிழகமே திரண்டு நிற்கின்ற மகத்தான  போராட்டத்தை நடத்துவோம். மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்து வோம். அதே நேரத்தில் வாழ்விழந்து தவிக் கின்ற, வசதியிழந்து தவிக்கின்ற, வீடு இல்லாத மக்கள், பட்டா இல்லாத புறம்போக்கில் குடி யிருக்கும் மக்களுக்கான அவர்களின் உரிமை களுக்கான போராட்டத்தில் மாற்றுச் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும்.

உத்தமத் தோழர்களின் கட்சி

விழுப்புரம் மாவட்டத்தில் மாநாடு நடத்தும் பணியை ஏற்றுக்கொண்டு மாவட்டம்  முழுவதிலும் உள்ள கட்சித் தோழர்கள் இரவு  பகலாக உழைத்து வெற்றிகரமாக்கி உள்ளனர்.  மிகப்பெரிய வெள்ளச் சேதம் ஏற்பட்டு இயற்கை இடர்பாடுகளில் தவித்த போது அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றியது. அனைவருக்கும் மாநிலக் குழு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த மாநாட்டிற்கு தமிழ கம் முழுவதிலுமிருந்து தோழர்களை  அழைக்கவில்லை. பக்கத்து மாவட்டங்க ளைச் சேர்ந்த தோழர்களை மட்டுமே அழைத்  துள்ளோம். அகில இந்திய மாநாடு மதுரையில்  நடைபெற உள்ளதால், அந்த மாநாட்டிற்கு தமி ழகம் முழுவதுமிருந்து தோழர்கள் திரண்டு வரு வார்கள். இது கூட்டி வரப்பட்ட கூட்டம் அல்ல.  உதிரத்தைச் சிந்தி உழைத்த பணத்தில் சிவப்புக்  கொடி ஏந்தி, மாநாட்டில் உணர்வோடு கலந்து கொண்டவர்களின் கூட்டம். அத்தகைய உத்தமத்  தோழர்களை கொண்டிருக்கும் கட்சி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

எழுச்சிமிகு அணிவகுப்பும் உணர்ச்சி மிகு பொதுக்கூட்டமும்

விழுப்புரம், (சீத்தாராம் யெச்சூரி அரங்கம்) ஜன. 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடை பெற்று வருகிறது. மாநாட்டின் முதல் நாள்  பொதுமாநாடும், மாலையில் மாபெரும்  செந்தொண்டர் அணிவகுப்பும், பொதுக்கூட்ட மும் நடைபெற்றது.   பேரணியை கட்சியின் மூத்த தலைவர் அ. சவுந்தரராசன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், சு.வெங்கடேசன் எம்.பி.,  மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.  ராமமூர்த்தி, செயலாளர் என். சுப்பிரமணி யன் ஆகியோர் பேரணியின் முகப்பில் அணி வகுத்து வந்தனர். பேரணியில் 24-ஆவது மாநில மாநாட்டை  குறிக்கும் வகையில் 24 செங்கொடிகளை ஏந்தி செந்தொண்டர் அணியின் மாநிலப் பொறுப்பாளர் செ. முத்துகண்ணன், கன்வீ னர் எஸ். பாலா, ஒருங்கிணைப்பாளர் ஜி. ஸ்டா லின் ஆகியோர் தலைமையில் ஆயிரக்க ணக்கான செந்தொண்டார்கள் மாநாட்டு  அரங்கில் இருந்து விழுப்புரம் புதிய பேருந்து  நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடை பெறும் திடல் வரை (நகராட்சி மைதானம்) கட்சியின் முதுபெரும் தலைவர்கள் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி, ஜானகி அம்மாள், என்.வரதராஜன், மைதிலி சிவ ராமன் உள்ளிட்ட பல தலைவர்களின் படங் களை ஏந்தி மிடுக்குடன் அணிவகுத்து வந்த னர். தீயணைப்பு நிலையம் அருகே அமைக்  கப்பட்ட  மேடையில் அரசியல் தலைமைக்  குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், ஜி. ராம கிருஷ்ணன் ஆகியோர் செந்தொண்டர் களின் அணிவகுப்பை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். பேரணியை வாழ்த்தி  எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் உள்ளிட்ட வர்க்க  வெகுஜன அமைப்பினர் வரவேற்றனர். பேரணியில் சிலம்பாட்டம் தீப்பந்தம் உள் ளிட்ட பாரம்பரியக் கலைகளை நிகழ்த்தி வந்த னர். இது அனைத்துத் தரப்பினரின் கவ னத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே தோழர் என். சங்கரய்யா நினைவுத் திடலில் (நகராட்சி மைதானம்) பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டச் செயலா ளர் என். சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.  குமார் வரவேற்றார். அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கே. பாலபாரதி, டி. ரவீந்திரன் ஆகி யோர் உரையாற்றினர். விழுப்புரம் வட்டச் செயலாளர் ஆர். கண்ணன் நன்றி கூறி னார். பொதுக்கூட்டத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளை பிரகாஷ் காரத் வெளியிட  மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆத்ரேயா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்  டார். மேலும் திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழு, காம் ரேட் கேங்ஸ்டா இசைக்குழுவினரின் கலை  நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.