திருவனந்தபுரம், மே 29- கேரளத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 84 பேருக்கு கோவிட் உறுதியானதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதில் 5 பேரைத்தவிர மற்ற அனைவரும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறினார். வியாழனன்று செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் கூறியதாவது: கேர ளத்தில் மேலும் ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் தெலுங்கா னாவைச் சேர்ந்தவர். இவர் ராஜஸ்தா னுக்கு செல்லவேண்டிய ரயிலில் ஏறுவ தற்கு பதிலாக திருவனந்தபுரம் ரயிலில் தவறுதலாக ஏறி வந்தவர். நோயாளிக ளில், 48 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். காசர்கோடு -18, பாலக் காடு -16, கண்ணூர் -10, மலப்புரம் -8, திரு வனந்தபுரம் -7, திரிச்சூர் -7, கோழிக் கோடு -6, பதனம்திட்டா -6, கோட்டயம் -3, கொல்லம், இடுக்கி, ஆலப்புழா தலா 1. இவர்களில் 31 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். தமிழ்நாடு -9, கர்நாடகா -3, தில்லி -2, குஜராத் -2, ஆந்திரா -1 மற்றும் ஐந்து பேர் தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டவர்கள். ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் குணமடைந்தனர். இவர்கள் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதுவரை 1088 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள் ளது. அவர்களில் 526 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,15 297 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். இதில் 1,14 305 பேர் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப் படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 992 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மொத்தம் 210 பேர் வியாழனன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதுவரை, 60,685 மாதிரிகள் சோத னைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 58,460 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என வந்துள்ளது. முன்னு ரிமை வகையைச் சேர்ந்த மொத்தம் 9937 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் 9217 எதிர்மறையாக இருந்தன. மாநிலத்தில் தற்போது 82 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. வியாழ னன்று மேலும் ஆறு இடங்கள் அதி கரித்தன என்று முதல்வர் கூறினார்.