பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய தலைமை ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்ப றைகள் சிதிலமடைந்து மாணவ -மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார் கள் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அப் பள்ளியின் கழிப்பறைகளை இடித்து தரைமட்டமாக்கி யதுடன் அப்படியே விட்டு விட்டார்கள். தொடர்ந்து புதிய கழிப்பறை கட்ட கோரி க்கை வைத்து வந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இடித்த அதிகாரிகள் புதி தாக மாணவ - மாணவி களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வந் தது. இதனால், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத் தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் இருந்து வந்துள்ள னர். இதனைக் கண்ட பள்ளி தலைமையாசிரியர், தன்னு டைய சொந்த செலவில் தற் காலிக கழிப்பறை கட்டி அதனை பள்ளி மாணவ -மாணவிகளை அழைத்து வந்து திறந்து வைத்தார். இதனால் பள்ளி மாணவ -மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வு களை கண்டு அப்பகுதி மக் கள் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.