tamilnadu

img

ஆளுநர் வெளியேறியது “சிறுபிள்ளைத்தனமானது”

2025-ம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 அன்று துவங்கியது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாய கர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியா தைக்கும் பின் பேரவைக்குள் சென்ற  ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்ற சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், “இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள்  பேரவையிடம் அதன் அரசியல மைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதல மைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர் களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலை க்குரிய விஷயமாகும். அரசியல் சாச னம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்ட மாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என அளி க்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்திய நிலையில், சபா நாயகர், அவை முன்னவர், அமைச்சர் கள் என பலரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆளுநரை விமர்சித்துள் ளார். இதுதொடர்பாக தன் பதிவில் முதல்வர், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்க மாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக் காமலேயே போயிருப்பது சிறு பிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசையும், நூற் றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேர வையையும் தொடர்ந்து அவமதிக் கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப்  பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டி ருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும்  வினா!” என்று கூறியுள் ளார்.