மதுரை, அக்.29- மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வடக்கு -1 பகுதிச் செயலா ளர் வி.கோட்டைச்சாமி மனைவி பாண்டியம்மாள் மற்றும் மனைவியின் தங்கை கார்த்திகை தீபா ஆகியோர் திங்களன்று மாலை தீபாவளிக்கு ஜவுளி எடுக்க கீழமாசி வீதி காமராஜர் சாலை சந்திப்பு விளக்குத்தூண் அரு கில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்ற போது ஜவுளி கடை முன்பு மணி பர்ஸ் கிடந்துள்ளது. பாண்டியம்மாள், கார்த்திகை தீபா ஆகிய இருவரும் அதை எடுத்துப் பார்த்த போது அதில் நகையும் பணமும் இருந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு வந்து விவரத்தை பாண்டியம்மாள் கணவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செய லாளருமான வி.கோட்டைச்சாமி கூறி னர். உடனடியாக நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனிடம் தகவல் கூறி யுள்ளார். மேலும் மணி பர்சில் ஒரு லட்சம் மதிப்புள்ள மோதிரம், தோடு, ரொக்கம் ரூ.20 ஆயிரம் இருப்பதாகவும், உள்ளே வாக்காளர் அடையாள அட்டை ஒன்றும் உள்ளது என்றும், சிலைமான் அருகில் உள்ள சக்குடி பகுதியைச் சேர்ந்த ராசா என்பவரின் வாக்காளர் அடையாள அட்டை என்றும் குறிப்பிட்டுள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கூறினார். அவர் சம்ப வம் நடைபெற்றது நகர் பகுதியில் என்ப தால் நகர் பகுதியில் விசாரிக்க கூறி யுள்ளார். பின்னர் மதுரை காவல்துறை ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய போது, அவர் விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை கேட்ட போது அங்குள்ள காவல் ஆய்வாளர் நகை, பணம் காணவில்லை என்று புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் பொருள் கிடைத்து விட்ட தாகவும் புகார் கொடுத்தவர்களை அழைத்து வர சொல்லி உள்ளார். அப்போது அவர் நகை பணம் தவற விட்டவர்கள் சிலைமான் காவல்நிலை யத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் அங்கே தொடர்பு கொண்டு பணம் கிடைத்துவிட்டது. காலையில் வந்து சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நகை, பணத்தை தவறவிட்ட நிரோஷா என்பவர் தன்னுடைய கண வருடன் செவ்வாயன்று காலை விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு வந்து காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் முன்னிலையில் பொருளை கண்டெடுத்த பாண்டி யம்மாள், கார்த்திகை தீபா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செய லாளர் வி.கோட்டைச்சாமி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் ஆகியோர் ஒப்படைத்தனர்.