திருப்பூர், ஜன.12- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளா கத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடமாடும் நுண்கதிர் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் வியாழனன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்புத்திட்டத் திற்கு 1 நடமாடும் நுண்கதிர் வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள் ளது. இந்த நடமாடும் நுண்கதிர் வாகனம் மக்களைத் தேடி ஒவ்வொரு பகுதி வாரியாக சென்று காசநோய் கண்டறிய உள் ளது. என மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மாவட்ட காசநோய் திட்டம்) தீனதயாள், அருண்பாபு மற்றும் மருத்துவ அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.