tamilnadu

நெருக்கடி உண்மையானது; அதனால் மாற்றமும் உண்மையானதே!

நெருக்கடி உண்மையானது; அதனால் மாற்றமும் உண்மையானதே!

இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் குறித்துப் பேசும்போது “நெருக்கடி” என்ற சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படக்கூடிய சொல்லாக மாறியுள்ளது. இந்த நெருக்கடிகளின் தன்மை மற்றும் அதனால் உருவாகும் நீண்டகால தாக்கங்கள் குறித்தும் விவாதங்கள் தொடர்கின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும், முதலாளித்துவம் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து நீடித்து வரு கிறது. இது முதலாளித்துவத்தின் பலவீனங்களின் உண்மையான அளவு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

முற்றிலும் வேறுபட்ட நெருக்கடி

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள நெருக்கடிகள், பொருட்களின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற (விற்பனை) செயல்முறைகளில் ஏற்படும் இடைவெளிகள் மற்றும் முறிவுகளால் உருவா கின்றன. இந்த நெருக்கடிகள் உற்பத்தியில் முத லீட்டுக் குறைவு மற்றும் பொருளாதார சுழற்சியில் நுகர்வு குறைவு ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இது விற்கப்படாத பொருட்கள் குவிந்துகொண்டி ருக்கும்போது, நுகர்வோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு வழிவகுக்கிறது. இயற்கைப் பேரழிவுகள் அல்லது போர்களால் ஏற்படும் நெருக்க டிகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது; இது அதீதமான உற்பத்தியால் உருவாகும் நெருக்கடி யாகும். இந்தக் கட்டுரையில், இத்தகைய நெருக்கடிகளின் முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் மற்றும் அவற்றின் வரலாற்று ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய அம்சங்களைப் பற்றி ஆராய்வோம். மேலும், பொரு ளாதார நிலையற்ற தன்மையின் பரந்த இயக்கவிய லுடன் இந்தக் குறிகாட்டிகள் எவ்வாறு தொடர்புபடு கின்றன என்பதையும் பார்ப்போம்.

ஊசலாடும் வளர்ச்சி விகிதம்

ஒரு சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பொருளாதார வளர்ச்சி விகிதமே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடா கும். உலக வங்கித் தரவுகளின்படி, நவ தாராளமயக் காலத்தின் முதல் கட்டத்தில் (1991–2007) சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் 3.22 சதவீதமாக இருந்தது. 2008 நிதி நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் (2008–2020) இது 2.72 சதவீதமாகக் குறைந்தது, மேலும் தொற்றுநோய்க்குப் பிறகான ஆண்டுகளில் இது 2.40 சதவீதம் என்ற அளவிலேயே ஊசலாடுகிறது. 2024 முடிவடைந்துள்ள நிலையில் முதன்மையான ஏழு முதலாளித்துவ நாடுகளில் ஆறு நாடுகள் மந்தநிலை அல்லது பொருளாதார மந்தநிலையில் உள்ளன. இது உலகப் பொருளாதாரத்தின் மோச மான நிலையை வெளிப்படுத்துகிறது. முதலீடு மற்றும் மூலதனத்தினால் வளர்ச்சி ஏற்படு கிறது. வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) தனியார் துறையின் முதலீட்டின் முக்கிய அளவீடாகும். இது 2021-இல் 2.41 டிரில்லியன் டாலராக இருந்தது. 2022-இல் 1.88 டிரில்லியன் டாலராகவும், 2023-இல் 0.87 டிரில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது. இது 2021 வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது. இந்தச் சரிவு கொரோ னா தொற்றுக்குப் பிந்திய ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமல்ல; 2008 முதல் நிதி சாராத சொத்துக்களில் நிகர முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஆனால் முதலீடு  குறைவது எதைக் குறிக்கிறது?  

முதலாளித்துவ முறை லாபத்தை மேலும் மேலும் குவிப்பது என்ற அடிப்படையில் இயங்குகிறது. உற்பத்தி தொடர்பான முதலீடுகளால் லாப விகிதம் அதிகமாக இருக்கும்போது தான் முதலீடு உறுதி யாக இருக்கும். லாப விகிதம் குறையும்போது முதலா ளிகள் பணத்தைப் புதிதாக முதலீடு செய்யாமல் குவித்து அல்லது சேமித்து வைக்கின்றனர். இது முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடிகள் உருவாக வழிவகுக்கிறது.

எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை...

\வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தால் லாப அளவில் ஒரு தொடர்ச்சியான சரிவு காணப்படும். 1983, 1992, 2000 (Y2K கணினி தொழில்நுட்பத் துறை வளரும் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி), 2008 (அமெரிக்கா வில் உருவாகி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற் படுத்திய நெருக்கடி) மற்றும் 2015-இல் ஒரு பெரும் சரிவு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த கால இடைவெளி, நெருக்கடிகள் தோராயமாக ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற் படுகிறது என்பதைக் காட்டுகின்றது. உற்பத்தி தொடர்பான லாப அளவு இரண்டு காரணி களைப் பொறுத்து அமைகிறது: 1.    முதலாளிகள் உபரியை எடுக்கும் அளவு 2.    முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்திற்கான சம்பள விகிதம் அதாவது, முதலாளிகள் உபரியை (கைப்பற்றும்) எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரிக்கும்போது, தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பில் செய்யப் படும் அதிக முதலீடுகளால் முதலாளிகளின் லாபத்தின் அளவும் குறையும். நவ தாராளமயக் காலத்தில் உலக அளவில் சம்பளத்தின் அளவு 7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், உலக அளவில் மொத்த சம்பளத்தில் பாதி அளவை முதல் 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே பெறுகின்றனர். இது உலக அளவில் எஞ்சியுள்ள 90% தொழிலாளர்களிடையே கடுமையான வறுமை நிலைமையைக் காட்டுகிறது. தானியங்கி முறை மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தற்காலிக இலாப விகிதத்தை அதிகரிக்கலாமே தவிர, முழு முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒரு புதிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

மூலதனக் குவிப்பு மற்றும் லாபத்தின் அளவு

மூலதனக் குவிப்புக்கும் லாபத்தின் அளவுக்கும் இடையேயான உறவு மற்றொரு முக்கியமான காரணியாகும். மொத்த நிலையான மூலதன உரு வாக்கம் (GFCF) என்பது இயந்திரங்கள் மற்றும்  உட்கட்டமைப்பில் செய்யப்படும் புதிய முதலீடு களைக் குறிக்கின்றது. இது மூலதனத்தைக் குவிப்ப தன் விளைவுகளைப் பிரதிபலிக்கின்றது. வரலாற்று ரீதியாக ஜிடிபியின் சதவீதமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கம் லாப விகிதத்துடன் ஒரு எதிர் மறைத் தொடர்பைக் காட்டுகின்றது. அதாவது, லாபம் மனித உழைப்பிலிருந்து பெறப்படுகிறதே தவிர, இயந்திரங்களிலிருந்து பெறப்படுவதில்லை என்பதை அது வெளிக்காட்டுகிறது. மூலதனக் குவிப்பு உச்சத்தை அடையும்போது லாப விகிதம் குறையத் துவங்குகிறது, அப்போது நெருக்கடிகள் ஆரம்பிக்கின்றன. இது 2000, 2008, 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தெளிவாகத் தெரிந்தது. இது நெருக்கடிகள் உருவாகும் காலத்தி ற்கு இடையிலான இடைவெளிகள் குறைந்து வரு வதைக் காட்டுகிறது. இது இந்த நெருக்கடிகளின் முறையான தன்மையை வெளிப்படுத்துகிறது. மூலதனக் குவிப்பு தானியங்கி முறை மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு லாபத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், புதிய முதலீடுகளுக்கான தேவை, புதிய தொழில்கள் மற்றும் சந்தைகளுக்கான தேவையை உருவாக்குகிறது. இது தொழிலாளர்களின் கையிருப்பைக் குறைத்து முழுப் பொருளாதார அமைப்பின் லாபத்தின் மீதும்  ஒரு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, முதலாளித்து வத்தைத் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குத் தள்ளுகிறது.

ஊகப் பொருளாதாரம் (எதிர்) உண்மையான பொருளாதாரம்

மூலதனக் குவிப்பு உச்சத்தை அடையும்போது மற்றும் உற்பத்தி தொடர்பான லாப விகிதம் குறையும்போது, முதலீடுகள் ஊகச் சந்தைகளுக்குத் திருப்பப்படுகின்றன. ஊக முதலீடுகள் தற்காலி கமாக அதிக வருமானத்தை ஈட்டக்கூடும் என்பது தற்போதைய முதலாளித்துவத்தின் தனித்தன்மை யாக உள்ளது. இந்த ஊகப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, எதிர்காலப் பொருட்களிலிருந்து அதிக லாபம் ஈட்டும் எதிர்பார்ப்பு அதிக முதலீட்டில் பிரதிபலிக்கின் றது. இந்த ஊக முதலீடுகள் வட்டி, வாடகை மற்றும் அத்துமீறி வற்புறுத்துவது (மறைமுகமாக) போன்ற பல வடிவங்களில் குவிக்கின்றன. இது உண்மையான பொருளாதாரத்தை மீறி, மற்றவர்களின் சேமிப்பைப் பறித்து முதலீடு செய்வது என்ற ஆதிக்கம் செலுத்தும் காலம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பங்கு வர்த்தகமே இந்த ஊக முதலீட்டின் முகமா கும். இது உண்மையான ஜிடிபியின் சதவீதமாக அள விடப்படும்போது ஒரு சுவாரசியமான தோற்றத்தைக் கொடுக்கிறது. மூலதனக் குவிப்பு மிக அதிகமாகவும், லாபம் மிகக் குறைவாகவும் இருக்கும் ஆண்டுகளில் ஊக வணிகச் செயல்பாடு உச்சத்திற்குச் சென்று வீழத் துவங்குகிறது. இந்த நிகழ்வு பொதுவாக “குமிழி வெடிப்பு” என்று அழைக்கப்படுகிறது. லாபத்தின் அளவு குறையும்போது நெருக்கடிகள் வெடித்து வெளிவருகின்றன. ஏகபோக முதலாளிகள் அதிக லாபத்தை எடுத்துத் தொடர்ந்து நீடிக்க முயற்சிக் கின்றனர். இந்த முயற்சி சிறிய நிறுவனங்களை வணிகப்போட்டியிலிருந்து ஒதுக்கித் தள்ளுகிறது. இந்தச் செயல்முறை மூலம் ஏகபோக நிறு வனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி நெருக்க டியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றன. உல களாவிய அனுபவத்தை இங்கு பார்க்கலாம். இது நெருக்கடிகள் உருவான ஆண்டுகளுக்கு இடை யிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுகிறது.

நெருக்கடியின்  அமைப்பு ரீதியான தன்மை

முதலாளித்துவ அமைப்பு மறுக்க முடியாத வகையில் நெருக்கடிகளுக்கு ஆட்படக்கூடியது. அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தர்க்க ரீதியிலும் தொடர்கின்றது. 1870களில் மற்றும் 1930களில் தோன்றிய உலகளாவிய நெருக்கடிகளைப் போல் அல்லாமல், தற்போதைய நெருக்கடி வெறுமனே முதலாளித்துவத்தில் ஏற்படும் நெருக்கடி அல்ல, முதலாளித்துவத்திற்கு உள்ளேயே உருவாகும் நெருக்கடி ஆகும். இது உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் எல்லா வழிமுறைகளையும் அடைத்து, புதிய தாராளமய லாபக் குவிப்பு மாதிரி உடைவதைப் பிரதிபலிக்கிறது. இந்த நவ தாராளமயக் கொள்கை முறையானது தொழிலாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல் அமைப்பு கள் முழுவதும் மூலதனத்தின் எல்லையை விரிவு படுத்தி, அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நீடித்த தன்மையின் அடித்தளங்களைத் தகர்த்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு நெருக்கடி மனித நாகரீகத்தின் பொருளாதாரம், அரசியல், சமூகம், கலாச்சாரம், ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்து அம்சங்களையும் மிக ஆழமாகப் பாதித்துள்ளது. ஒரு நாட்டிற்கு மட்டும் கட்டுப்படாத நிதி மூலதனம் உள்ள, தீவிர வலதுசாரி இயக்கங்கள் மற்றும் நவ-பாசிசத்தின் எழுச்சி இருக்கும் உலகத்தில், நெருக்கடி யின் மையப்புள்ளி மேலும் தொடர்ந்து மாறும்போது மந்தநிலை தீவிரமடைகிறது. நவ தாராளமய, நவ பாசிச வளர்ச்சி மற்றும் மக்க ளின் தேவைகளுக்கு இடையிலான முரண்பாடு களைத் தீர்க்க, சமூகக் கட்டமைப்பின் தீவிரமான மாற்றம் தேவைப்படும்.அதே நேரத்தில் நவ தாராள மய கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கையை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெ டுப்பது முக்கிய கடமையாக உள்ளது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி (பிப்.23)  தமிழில் : சேது சிவன்