கோவையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளிக்கு, மாநகராட்சி மூலம் ரூ.1.60 லட்சம் வரி விதிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாநகராட்சி வணிக வரியை, அவுட்சோர்சிங் முறையில் ட்ரோன் சர்வே மூலம் அளவீடு செய்து வரி நிர்ணயம் செய்யும் நடைமுறையை மேற்கொண்டுள்ளது. ட்ரோன் சர்வே முறை குளறுபடியை ஏற்படுத்தும், இதனை கைவிட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில், சிபிஎம் மாமன்ற உறுப் பினர்கள், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்து வலி யுறுத்தி இருந்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் ட்ரோன் சர்வே முறையால் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை 100 அடி சாலை, 8 ஆவது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (75). இவர் தனது மனைவி பொன்னம்மாளு டன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் காவலா ளியாக பணியாற்றுகிறார். கடந்த 1935 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தனது தாத்தா வாங்கிய 1,100 சதுர அடி பரப்பளவிலான வீட்டில் வசித்து வரு கிறார். பழனிச்சாமி தனது வீட்டின் முன் பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாட கைக்கு விட்டுள்ளார். இதற்காக மாநக ராட்சிக்கு வணிக வரியும் செலுத்தி வருகிறார். 6 மாதத்திற்கு ஒருமுறை வரி செலுத்தி வரும் நிலையில், கடந்த 2023-24-இல் ரூ.2,182 வரி செலுத்தினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள், தனியார் மூலம் ட்ரோன் சர்வே எடுத்துச் சென்ற னர். மேலும் நிலுவையில் உள்ள வரியை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ரூ.3 ஆயிரத்துடன் பழனிச்சாமி வரி செலுத்த மாநகராட்சி மத்திய மண்ட லத்திற்குச் சென்ற போது, மாநகராட்சி யில் வணிக வரி 6 சதவீதமாக உயர்ந்துள்ள தாக தெரிவித்தனர். இருப்பினும் அதை கட்டுவதாக பழனிச்சாமி கூறிய நிலை யில், கட்ட வேண்டிய தொகை ரூ.1.60 லட்சம் எனக் கூறியதால் அதிர்ச்சிய டைந்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, “அவரது மொத்த இடம் 5,177 சதுர அடி எனவும், தவணை தொகை ரூ.52,732 எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழனிச்சாமி தனக்கு அவ்வளவு இடம் இல்லை என்றும், தவறாக சர்வே செய்யப்பட்டதாகவும் கூறினார். இதுகுறித்து, மனுவாக எழுதி பெட்டியில் போடுமாறு அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித தகவலும் மாநக ராட்சியிடமிருந்து வரவில்லை என்றார் பழனிச்சாமி. இச்சம்பவம் குறித்து பழனிச்சாமி கூறுகையில், “எனது தந்தை பெயரில் வீடு உள்ளது. நானும் எனது மனைவி யும் தனியாக வசித்து வருகிறோம். எனது வீட்டிற்கு இதுவரை ரூ.2,182 வரி செலுத்தி வந்தேன். கடந்த செப்டம்பர் மாதம் ட்ரோன் அளவீடு செய்து ரூ.52 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என எழுதி கொடுத்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, மனுவாக எழுதி பெட்டியில் போடச் சொன்னார் கள். இதுவரை எந்த பதிலும் எனக்கு வர வில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். அதில் ரூ.1.60 லட்சம் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 1,100 சதுர அடி மட்டுமே இடம் உள்ள நிலையில், 5,170 சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 ஆயிரம் அடி இடத்தை மாநக ராட்சி கொடுத்தால் அந்த வரியை நான் உடனே கட்டி விடுகிறேன்” என்றார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் கூறு கையில், “ட்ரோன் சர்வே முறை என்பது அநியாயமான நடைமுறை. இருக்கும் ஊழியர்களை நம்பாமல், மின் சாத னங்களை வைத்து எடுக்கக் கூடியது தான் ட்ரோன் சர்வே. அதை அடிப்படை யாக வைத்து கணினியில் வரியை உயர்த்துவதால், சாதாரண மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. பல்வேறு ஆய்வுக்கும் பரிசீல னைக்கும் உட்பட்ட பிறகே இறுதி செய்ய வேண்டும். ஆனால் இந்த விவ காரத்தில் பாதிக்கப்பட்ட பழனிச்சாமி, தனது ஆயுள் முழுவதும் போராடி னாலும் மாநகராட்சியின் வரியை கட்ட முடியாது. ஏதாவது வகையில் மக்கள் வரியை கட்டுவார்கள் என நினைத்து மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கை யால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ட்ரோன் சர்வே முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சி யின் வேண்டுகோள். மேலும் பழனிச்சாமியின் கட்ட வேண்டிய அரையாண்டு வரி ரூ.911 மட்டுமே. கடந்த வரி சீராய்வின் போது 100 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டது. ரூ.1,822 வரி கட்டி வந்தார். அதுவும் பத்தாது எனக்கூறி, ட்ரோன் சர்வே மூலம் பெரிய சுமையை மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. கடந்த 1950-க்குப் பின் எந்த கட்டுமானப் பணி களும் நடைபெறவில்லை. ட்ரோன் சர்வே தவறான தகவலை வழங்கி யுள்ளது”. கோவை மாநகராட்சி நிர்வாகம் அவுட்சோர்சிங் முறையில் ட்ரோன் மூலம் சர்வே எடுக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ட்ரோன் சர்வே-யின் தவறான அளவீட்டை காட்டி, அதன் மூலம் காவ லாளியின் ஓட்டு வீட்டிற்கு ரூ.1.60 லட்சம் வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - கவி