tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக கருத்துப் போராட்டங்களில் ஈடுபடுவது மட்டுமல்ல - - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் -.

கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக கருத்துப் போராட்டங்களில் ஈடுபடுவது மட்டுமல்ல; சமூக மற்றும் அரசியல் போராட்டங்களிலும் ஈடுபடுகிறது. லெனின் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டு ஏங்கெல்ஸ் அவர்களால் கூறப்பட்டது போல தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க எதிரியை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்  மட்டுமின்றி அனைத்துக்கும் மேலாக சித்தாந்த ரீதியிலும் தோற்கடிக்க வேண்டும். தனது எதிரியுடன் இத்தகைய அனைத்து தளங்களிலும் நடத்தப்படும் போராட்டங்கள் மூலம்தான் தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பாட்டாளி வர்க்க புரட்சியின் அணிதிரட்டும் அமைப்பாளராக பரிணமிக்கிறது.