tamilnadu

img

சிஐடியு நடைபயணம் துவங்கியது

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி சிஐடியு நடைபயணப் பிரச்சாரம் மே 19 வெள்ளியன்று மாலை திருவொற்றியூர், கோயம்புத்தூர், கடலூர், மீஞ்சூர், களியாக்காவிளை, தென்காசி, ஓசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களுடன் துவங்கியது. குமரி மாவட்டம் களியாக்காவிளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், உதவிப் பொதுச் செயலாளர் வி.குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.