ஒன்றிய அரசை விளாசிய முதல்வர்
தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்தி ருக்கிறார். மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு தான் மும்மொழித் பாடத் திட்டத்தை வலியுறுத்து கிறோம் என்று தமிழக பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், செங்கோலை நாடாளுமன்றத் தில் நிறுவுவதற்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருக்கும் இந்தியை அப்புறப்படுத்துங்கள். காலாவதியான சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்குவதை விட தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்குங்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவியுங்கள். “தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களில் அந்தி யோதயா, தேஜஸ், வந்தே பாரத் என சமஸ்கிருதப் பெயர்களை திணிப்பதை விட்டுவிட்டு, திருக் குறள், செம்மொழி, வைகை, முத்துநகர், மலைக் கோட்டை என ரயில்களுக்கு பெயரிடும் செயல்களின் மூலம் தமிழ் மீதான பற்றை காட்ட வேண்டும். ஏமாற்று வதன் மூலம் அல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளாசியுள்ளார்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது
8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் புதன்கிழமை (மார்ச் 5) தொடங்கின. இந்த தேர்வை சுமார் 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 5) தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 3,89,423 மாணவர்களும், 4,28,946 மாணவிகள் என சுமார் 8,23,261 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுபோல் தனித்தேர்வர்கள் 4,755 பேரும், சிறைவாசிகள் 137 பேரும் என 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. தேர்வு மையங்களை கண்காணிக்க 4,470 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 44,236 கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 11,430 பேர் ஆப்சென்ட் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு 8.02 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், மொழித் தேர்வை 11,430 மாணவர்கள் எழுதவில்லை என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
சென்னை, மார்ச் 5 - கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனு மதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்ப வர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்று அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்: அமைச்சர்
சென்னை, மார்ச் 5- தமிழ்நாடு நலன் சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில், தென்மாநில நாடாளு மன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதியாகவும், தெளிவாகவும் உணர்த்தும் என கூறியுள்ளார்.