tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

முதலமைச்சர் நன்றி

சென்னை: “72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், கடிதம் மூலமாக வும், தொலைபேசி வாயி லாகவும், சமூக வலை தளங்களிலும் தங்களது வாழ்த்துகளை, ஊக்க மளிக்கும் பாராட்டுகளை தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதர வோடும் தொடர்ந்து உழைப் பேன்! தமிழ்நாடு வெல்லும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் தெரிவித்திருக்கிறார்.  

முதல்வர் இன்று நாகை வருகை

நாகை: நாகப்பட்டி னத்தில் திங்களன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உத விகள் வழங்கும் விழா நாகையில் மார்ச் 3 அன்று நடக்கிறது.  

‘என் கண்ணீர் உன்ன சும்மா விடாது’
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களைச் சந்தித்த சீமான், ‘என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படிச் சொல்லுவீர்கள்? என கூப்பாடு போட்டதோடு புகார் கொடுத்த நடிகையை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டு, அதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்று ஆவேசமாக பேசினார். இதையடுத்து, சீமான் மீது புகார் தெரிவித்து வரும் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், “இனி நீ தப்பிக்கவே முடியாது. நீ நாசமா போய்டுவ... என்னுடைய கண்ணீர் உன்ன சும்மா விடாது” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.  

அமைச்சர் ரகுபதி விளக்கம்

புதுக்கோட்டை: புதுக் கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி, சீமான் பாலியல் வழக் கில் திமுக தலையிட வில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், பாலி யல் வழக்கு நடைபெற்று வருகிறது. சீமான் பாலியல் வழக்கில் திமுகவின் பின்புலம் எதுவும் இல்லை” என்றார்.