மதுரையில் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
பகவத் கீதை சாதிய மேலாதிக்கம், சமூக ஒடுக்கு முறையை நியாயப்படுத்துகிறது. அதனால்தான் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக்க பாஜக ஆட்சி யாளர்கள் முயற்சிக்கிறார்கள். ஏனெனில் அது கர்ம வினைப் பயன் என்று நம்மை அப்படியே அடிபணிய வைக்க முயற்சிக்கிறது என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான பொது மாநாட்டு நிகழ்ச்சியில் சீத்தாராம் யெச்சூரி துவக்கவுரை யாற்றினார். அவரது முழு உரை வருமாறு: கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாக மாநில மாநாடுகள் நடைபெறுவதில், தற்போது கடைசி யாக நடைபெறும் மாநில மாநாடு இது. நூற்றாண்டு காணும் நமது தோழர் என்.சங்கரய்யாவின் இயற்கையை விஞ்சிய மார்க்சிஸ்ட்டின் நினைவாற்றல் மிக்க எழுச்சிமிகு உரை நம்மை முன்னிலும் உறுதியாக செயல்படத் தூண்டு வதாக உள்ளது. அந்த உணர்வுடன், நம் நாடும், நம் நாட்டு மக்களும், சுரண்டலில் இருந்து விடுவிக்கப் பாடுபடும் நமது புரட்சிகர இயக்கமும் சந்திக்கும் சவால்களை சந்தித்து உறுதியுடன் முன்னேற நம்பிக்கையுடன் செயல்படு வோம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து சொல்வதா னால் நாம் தற்போது மிக மோசமான சவாலைச் சந்தித்து வருகிறோம். பாரதிய ஜனதா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்காண்டு காலத்தில், பாசிச இந்துத்துவா ராஷ்டிரா அமைக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்சின் சீர்குலைவு தத்துவார்த்த நிலையுடன் கூடிய அரசியல் நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட முறையில் வெறித்தனமாகச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. நவீன தாராளமய பொருளாதார கொள்கையைப் பின்பற்றி வருகிறது. நமது பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பது, பொதுத்துறையை தனியார்மயப்படுத்துவது, மிக மோச மான கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்தை வளர்ப்பது, நம் நாட்டை கொள்ளையடித்து கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத கூட்டை வளர்ப்பது ஆகியவற்றுடன் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஒழிக்கும் நோக்கத் தில் அடிப்படையான ஜனநாயக, குடிமக்கள் உரிமை களைப் பறிக்கும் எதேச்சதிகார நடவடிக்கை, அச்சுறுத் தும் வகையில் மிகப்பெருமளவு கைதுகள் செய்யக்கூடிய மோசமான உபா சட்டம் உள்ளிட்டவை அமலாக்கப்படு கின்றன. இத்தகைய பல்முனை தாக்குதலை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். இதன் மூலம் மதச்சார்பற்ற ஜன நாயக இந்திய குடியரசு என்பதை இந்துத்துவா ராஷ்டிரா அமைப்பதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
தாக்குதலுக்குள்ளாகும் 4 அடிப்படைத் தூண்கள்
இதற்காக அரசியல் சட்டம் உறுதிப்படுத்தி உருவாக்கி இருக்கக்கூடிய அனைத்து சுயேச்சையான அரசு நிறுவ னங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தை எடுத்துக் கொண்டால், மக்கள் பிரச்சனைகள் குறித்து நானும், டி.கே.ரங்கராஜனும் நாடா ளுமன்ற உறுப்பினர்களாக சேர்ந்து செயல்பட்டு, பல விச யங்களை அங்கு விவாதித்திருக்கிறோம். ஆனால் இப்போது பாரதிய ஜனதா அரசு தனக்குள்ள மிருகபல பெரும்பான்மையை வைத்துக் கொண்டு விவாதம் நடத்து வதையே கைவிட்டு விட்டது. இதன் மூலம் சமூகத்தின் பிரச்ச னைகளை விவாதிக்கும் நாடாளுமன்றம் என்பதற்கு மாறாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு வெறும் முத் திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றம் நீதித்துறையின் சுயேட்சைத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநி லத்துக்கான 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லுமா என்ற பிரச்சனை, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் ஊழலுக்கு சட்ட நியாயம் வழங்குவது போன்ற வழக்குகள் கடந்த மூன்றாண்டு காலத்தில் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. தேர்தல் ஆணையமும் அதேபோல்தான், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்துக் கூட அவர்கள் நட வடிக்கை எடுப்பதில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ ஆகி யவை அரசின் அரசியல் நடவடிக்கைக்குரிய கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் இந்திய அரசியல் சட்டத்தின் நான்கு அடிப்படை தூண்களான பொருளாதார இறையாண்மை, மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சி ஆகிய நான்கும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது இந்திய அரசியல் அமைப்புக்கு மிகப்பெரும் சவாலாகும். சுதந்திரப் போராட்ட தியாகத்தின் மூலம் பெறப்பட்டு கடந்த 75 ஆண்டு களாக நீடித்து வரும் அரசியல் சட்டத்தை சீர்குலைக்கும் பணியை பாரதிய ஜனதா அரசு செய்து வருகிறது. இதை அனுமதிக்க முடியாது. நாளை நல்லதொரு இந்தியாவை படைக்க இப்போதுள்ள இந்தியாவை பாதுகாக்க வேண் டும் என நாம் இந்திய மக்களிடம் சொல்ல வேண்டும், எதிர்காலத்தில் சோசலிச சமுதாயத்தைப் படைப்பதற்கு இன்றுள்ள இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும்.
மாநில உரிமைகள் பறிப்பு
இப்போது மாநில அரசுகளின் உரிமைகள் மிக மோச மாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டத்தின் பிரிவு 1 சொல்கிறது, இந்தியா என்பது மாநிலங்க ளின் ஒன்றியம் ஆகும். மாநில அரசுகள் இல்லாமல் ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இந்த புரிதல் அடிப்படையில்தான் மொழி வழி மாநிலம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இவை இப்போது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கூட்டாட்சி அழிக்கப்பட்டு ஒற்றை இந்தியா என்ற அரசாக மாற்ற முயல்கின்றனர். இந்துத்துவா ராஷ்டிரா அமைப்பதற்கு இது தேவை என அவர்கள் நினைக்கின்றனர். எனவே தான் அவர்கள் ஒன்றிய அரசு என்பதை மைய அரசு என்கின்றனர். மைய அரசு ஒன்றுதான் மற்ற மாநில அரசு கள் எல்லாம் நிர்வாகரீதியான ஏற்பாடுகள் என்று சொல் கின்றனர். ஆனால் அது உண்மையில்லை ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி மொழி, பண்பாடு, வரலாறு, பெரு மைகளைக் கொண்டுள்ளன. அவை அங்கீகரிக்கப்படு வதன் மூலம்தான் இந்தியா எழுந்து நிற்க முடியும். இந்தியா என்பது வெவ்வேறு மொழி, கலாச்சாரம், இனங்களைக் கொண்டிருந்தாலும் சமமான மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். இதைக் காப்பது நம் போராட்டத்தின் மிக முக்கிய மான பகுதியாகும்.
மோடியை பணியவைத்த மகத்தான போராட்டங்கள்
அதேசமயம் கடந்த நான்காண்டு காலத்தில் வலிமை மிக்க, மகத்தான பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள் ளன. குறிப்பாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு தழு விய போராட்டம், விவசாயிகளின் வீரஞ்செறிந்த வர லாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம், மோடியை அடிபணிய வைத்து விவசாய சட்டங்களைப் பின்வாங்க வைத்துள் ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் உட்பட நான்கு நாடு தழுவிய தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த போராட்டங்களின் மூலம் விவசாயத் துறையில் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழில் துறையில் தொழிலாளர்களின் ஒற்றுமை என்பது மென்மேலும் வளர்ந்து வருகிறது. இத்தகைய மகத்தான வல்லமை மிக்க ஏராளமான வெகு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றா லும் கூட தேர்தல்கள் வந்தால், அவற்றில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுகிறது, தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது ஏன் என நாம் கவனிக்க வேண்டும். குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் கொள்கைகளால் மக்க ளின் துன்பம் அதிகரித்து, ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி அதிகரித்து வந்தாலும் கூட, கடந்த சில நாட்களில் ஏழு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் போரை இதற்கு காரணமாக கூறுகின்றனர். ஆனால் இது உண்மையில்லை. கடந்த ஏழெட்டு ஆண்டு காலத்தில் லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய வரி என்ற முறையில் பெட்ரோல் விலையை உயர்த்தி இந்த அரசு மக் கள் மீது சுமைகளைச் சுமத்தியுள்ளது. இந்த வரியைக் குறைத்தாலே குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல் விலை யில் ரூ.35 வரை குறைக்க முடியும். இப்படி மக்கள் தலையில் சுமைகளைச் சுமத்தி பணத்தை அரசு குவித்தாலும் கூட தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது, அது ஏன் என்பதை குறிப்பாக துல்லியமாக கவனித்து, அதைத் தோற்கடிக்க வேண்டும்.
பிரிவினை அரசியல்...
இதை எப்படிச் செய்கிறார்கள்? வகுப்புவாத வெறி யைத் தூண்டிவிட்டு இருதுருவங்களாக பிரிப்பதன் மூலம் தான் இதைச் செய்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் விலைவாசி உயர்வு, வேலை யின்மை, வறுமை, பட்டினி உள்ளிட்ட மக்களின் அடிப்ப டைப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. மாறாக 80 சதவிகிதத்துக்கு எதிராக 20 சதவிகிதம் என்ற முறையில் இந்து, முஸ்லிம் மதவெறுப்பு பிரிவினையைத்தான் அனை வரும் பேசினார்கள். வெறுப்பை பரப்பி, வன்முறை யைத் தூண்டி, இந்துத்துவா அடையாளத்தை முன்னிறுத்து வதன் மூலம் அனைத்து மக்களின் அடிப்படை பிரச்சனை களையும் பின்னுக்குத் தள்ளினர். இத்தகைய வெறுப்பேற் படுத்தும் விசமத்தனமான முறையில்தான் அவர்கள் செயல்படுகின்றனர். அத்தகைய ஒரு வழியாகத்தான் புதிய கல்விக் கொள்கை மூலம் மக்களின் மனநிலையை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஒரு பகுதி உண்மையை...
இப்போது பிரதமர் காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் குறித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். 1990களில் காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்தபோது இந்து பிராம ணர்களான காஷ்மீர் பண்டிட்டுகள் குறி வைத்து தாக்கப் பட்டு வெளியேற்றப்பட்டனர் என்று ஒரு பகுதியை மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளனர். ஆனால் 90களில் தீவிரவாதம் அதிகரித்தபோது ஜம்மு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் பற்றி காவல் துறை தரும் புள்ளிவிபரம் என்ன தெரியுமா? அப்போது பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் 89 பேர் என்றால், மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள், பெரும் பாலும் முஸ்லிம்கள் 1635 பேர் என்று தெரிவிக்கிறது. ஆனால் இந்த உண்மையை அவர்கள் சொல்லாமல் மறைக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்து, முஸ்லிம் என்ற பிரிவினை கண்ணோட்டத்தை முன்நிறுத்துகின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் மனிதர்கள்தான் அவர்கள் உயிர் விலை மதிப்பற்றது, இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் தீவிர வாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறோம். இந்திய மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் இதை செய்யக் கூடாது, ஆனால் பாஜகவினர் மக்களைப் பிளவு படுத்தி இந்துத்துவ வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கத்தில், வெறுக்கத்தக்க விஷமத்தனத்தை பின்பற்றி வருகின்றனர். பாஜக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வரும் இந்த விசயத்தை நாம் மக்களிடம் அம்பலப்படுத்தி முறி யடிக்க வேண்டும்.
இந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அளித்து அனை வரும் பார்க்க வேண்டும் என்கின்றனர். அத்துடன் இந்த படத்தைப் பார்க்காதவர்கள் இந்திய தேச பக்தர்கள் இல்லை என பிரச்சாரம் செய்கின்றனர். இதன் மூலம் இந்திய மக்களை இந்து முஸ்லிம் எனப் பிரித்து, மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
தற்போது இதைவிட மிக மோசமான முறையில், பள்ளி களில் மாணவர்களுக்கு கட்டாயமாக பகவத் கீதை கற்றுத்தரப் போவதாக அறிவித்துள்ளனர். இது கல்வி யை காவி மயப்படுத்தும் வேலையாகும். நம் நாட்டின் துணை ஜனாதிபதி கூட, பகவத் கீதையை கற்பிப்பது என்ன தவறு என்று கேட்கிறார். பகவத் கீதையின் கருத்து களை சொல்லித் தருவதன் நோக்கம் என்ன, பகவத் கீதையின் போதனை என்ன? அது என்ன மாதிரியான விளைவை உருவாக்குகிறது என்பது முக்கியமானதாகும். பகவத் கீதை பல விசயங்களைச் சொல்கிறது, ஆனால் அதன் மையக் கருத்து என்ன, விஷ்ணு, அர்ஜூனனிடம் என்ன சொல்கிறார்? உன் எதிரில் நிற்பவர்கள் உற வினர்கள் எனப் பார்க்காதே, அவர்களை கொல் என்கிறார். கீதை கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே! என்கி றது. அந்த கடமையைச் செய்வது உனது கர்மா, நீ பலன்களைப் பற்றி கவலைப்படக் கூடாது என்கிறது. கர்மா என்றால் என்ன, யார் அதை வரையறுத்தனர்.
கர்மா என்பது மனுஸ்மிருதியால் வரையறுக்கப் பட்டது. கர்மா என்பது சமூகத்தை சாதி அமைப்பு முறை யால் வரையறுக்கிறது. நீ எந்த சாதியில் பிறந்திருக்கி றாயோ, அந்த சாதிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும் என்கிறது. நீ சூத்திரனாகவோ, தலித்தாகவோ பிறந்தி ருந்தால் அந்த சாதிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும், அப்படி செய்தால் உனது அடுத்த பிறவியில் நீ மேம்பட்ட வாழ்க்கையை அடையலாம் என்கிறது. இதை ஒருவர் ஏற்றுக் கொண்டால் சாதிய கொடுமை நடைபெறுவது நியா யமானதுதான் என்று ஏற்றுக் கொள்வதாகும். நீங்கள் சூத்திரராக இருந்தால் மனித கையால் மலம் அள்ளும் வேலையை செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வ தாகும். நீங்கள் தலித்தாக இருந்தால் உயர் சாதிக்கா ரர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இந்த கடமையை நீங்கள் செய்யத் தவறினால் பகவத் கீதைப்படி நீங்கள் மோசமான வாழ்க்கையைப் பெறுவீர்கள் என்பதாகும். இதன் மூலம் சாதிய மேலாதிக்கம், சமூக ஒடுக்கு முறையை நியாயப்படுத்துவதாகும்.
அத்துடன் பெண்கள் தந்தைக்கு பக்தி மிக்கவர் களாக, கணவருக்கு பணிவிடை செய்யக் கூடிய வர்களாக, ஆண் மகன்களை பெற்று குடும்பத்தை கவ னித்துக் கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கிறது. இத்தகைய மேலாதிக்க முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதன் மூலம் தலித் பெண்கள் மீது நடத்தப்படும் கும்பல் பாலியல் வன்கொடு மைகள், கொலைகளை நியாயப்படுத்தக் கூடியதாக உள்ளது கர்மா. சாதிய வன்கொடுமைகள், கீழ்சாதி யினரை உயிரோடு கொளுத்துவது ஆகியவற்றை நியா யப்படுத்துவர். இந்த அமைப்பு முறைதான் இந்தியாவின் தனித்துவமான வாழ்வியல் முறை என்று இளம் மனங்களில் ஏற்றி பின்னுக்குத் தள்ளப் பார்க்கின்றனர். இந்த பிற்போக்கான மோசமான சுரண்டல் சமூக அமைப்பு முறையை எதிர்த்து நாம் எல்லா வகையிலும் போராடி முறி யடிக்க வேண்டும்.
அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கு அதிகரிப்பு
உலக அளவில் மிக மோசமான அபாயகரமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில்தான் இந்தியாவில் இந்த நிலை உள்ளது. கொரோனா காலத்தில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை கெட்டிப்படுத்திக் கொள்ள பயன்படுத்தியது. சோசலிச சீனா அதன் மேலா திக்கத்துக்கு சவாலாக வளர்ந்து வரும் நிலையில் இப்போது சீனாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறுகிறது. முதலில் சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என சொன்னவர்கள், இப்போது சீன வளர்ச்சி தங்களுக்கு அச்சுறுத்தலாக வருகிறது என்று நினைத்து, அதை உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டும் என்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் உல கில் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வ தற்காக முயற்சிக்கின்றனர். உலகில் தற்போது ஏகாதி பத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு மேலும் கூர்மையடைந்திருக்கிறது. இந்த சூழ லில்தான் உக்ரைன் போர் நடைபெறுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணியை விரிவாக்கி வருகிறது. சோவியத் யூனி யன் வீழ்ச்சி அடைந்தபோது ஜெர்மனிக்கு கிழக்கே நேட்டோ கூட்டணியை விரிவாக்க மாட்டோம் என உறுதியளித்தவர்கள், இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவை சுற்றி நேட்டோ கூட்டணியை விரி வாக்கி உள்ளனர். உக்ரைன், பைலோ ரஷ்யா தவிர மற்ற நாடுகளை சேர்த்துக் கொண்டு ருஷ்யா எல்லையைச் சுற்றி 1லட்சத்து 75 ஆயிரம் நேட்டோ படை வீரர்களை, போரா யுதங்களுடன் நிறுத்தி உள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் உக்ரைன் போர் நடைபெறு கிறது. இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும், அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது. அதே சமயம் இந்த போரின் பின்புலமான நிலைமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போர் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் அல்ல, இது ரஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணிக்கும் இடையிலான போர் ஆகும். இதில் துர திருஷ்டவசமாக உக்ரைன் போர்க்களமாக மாறி யிருக்கிறது. நேட்டோ ஏற்கெனவே உறுதிமொழி அளித்த படி விரிவாக்கத்தைக் கைவிட்டால்தான் இப்பிரச்ச னைக்குத் தீர்வு காண முடியும். அமெரிக்க ஏகாதிபத்தி யம் தனது மேலாதிக்க நோக்கத்துடன் ரஷ்யாவை நிராயுத பாணியாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப் படுவதாகும். ஒருபுறம் சீனாவை தனிமைப்படுத்துவது, மறுபுறம் ரஷ்யாவை செயல்படாமல் முடக்கி நிறுத்து வது என்ற நோக்கம் கொண்டதாகும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் நாம் எதிர்க்க வேண்டும்.
இடதுசாரிகளின் அரசுகள்
அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க முயற்சிக்கு எதி ரான போராட்டத்தின் மூலம் லத்தின் அமெரிக்க நாடுகளில் மாற்றங்கள் நடந்துள்ளன. சிலி நாட்டில் அமெரிக்க ஏகாதி பத்திய ஆதரவு அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் கணிச மாக அங்கம் வகிக்கும் இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தி ருக்கிறது. 30 – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அமைச்சர் களாகப் பொறுப்பேற்றுள்ளனர். அதேபோல் பெரு, நிகர குவா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இடதுசாரி கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். கியூபா, வெனிசுலாவுடன் இந்த நாடுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செங்கொடி ஏந்தி போராடி இடதுசாரிகள் தலைமையில் அணிவகுக்கின்றன. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் வலது சாரி அரசுகள் தோற்கடிக்கப்பட்ட சமூக ஜனநாயக, இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற நாடுகளில் எல்லாம் இத்த கைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எங்கெல்லாம் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் அமெ ரிக்க ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் தோற்க டிக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்று அரசுகள் அமைந்துள் ளன. இவற்றில் எல்லாம் செங்கொடி முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுதான் உலகளவிலான நிகழ்வுப் போக்காக உள்ளது.
அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான இந்த உலக ளாவிய போராட்டத்தில், மோடி அரசு அமெரிக்காவின் இளைய பங்காளியாக செயல்படுகிறது. உள்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை சீர்குலைக்கும் அதே சமயம் பாஜக அரசு உலக அளவில் மேலாதிக்க ஏகாதி பத்திய அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக செயல்படுகின்றனர். எனவேதான் இந்திய நாடு, நம் நாட்டு மக்கள் நலன் காக்க, சுயேட்சையான வெளியுறவு கொள் கையைக் கடைப்பிடிக்கவும் பாஜக அரசை வீழ்த்துவது நம்முன் உள்ள மையமான கடமையாகும்.
பாஜகவுக்கு முக்கிய எதிரி யார்?
எனவே பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டும். இதை சாதிப்பதில் யார் முக்கிய சக்தியாக உள்ள னர்? மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் முக்கிய பங்கு வகிக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாம் இதைச் சொல்வதை விட பிரதமர் மோடி இதை ஏற்றுக் கொண்டி ருக்கிறார். அதனால்தான் அவர்கள் செங்கொடியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் குறி வைத்து தாக்கு தல் தொடுக்கின்றனர். இதனால்தான் திரிபுராவில் அவர்கள் வெற்றி பெற்றபோது பெரிய அளவுக்கு கொண்டாடினர். நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடியிடம், 2 எம்.பி.க்கள் மட்டுமே இருக்கும் திரி புரா வெற்றியை இந்தளவு கொண்டாடுவதற்கு காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த மோடி, இது 2 எம்.பி.க்கள் மட்டும் உடையதாக இருக்கலாம், ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்தது எங்களுக்கு தத்து வார்த்தரீதியான வெற்றி என்றார்.
உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு தொலைக்காட்சிகளை அழைத்து பேசிய மோடி, எங்கே இடதுசாரிகள், செங்கொடி என்று கேட்டார், அவர்கள் நாட்டின் ஒரு ஓரத்தில் கேரளாவில் இருக்கிறார்கள், ஆனால் அவர்களது தத்துவம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
எங்கள் வர்க்க எதிரியின் இந்த அங்கீகாரம் தான் செங்கொடி, மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அதனால்தான் அவர்கள் திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் எங்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல் தொடுத்து வருகின்றனர். மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், பிரச்சனைகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டி போராடி, அவர்களை தோற்க டிக்கும் வல்லமை படைத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள், செங்கொடி இயக்கத்தினர் என்று எங்கள் வர்க்க எதிரிகள் தெளி வாக உணர்ந்திருக்கிறார்கள்.
விரிவான மதச்சார்பற்ற கூட்டணி
எனவே நமது கடமைகளை நிறைவேற்ற முதலில் நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதன் அடிப்ப டையில் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், இதன் மூலம் இடதுசாரி ஜனநாயக சக்திகளை, மக்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். இத்துடன் தேர்தல் சமயங்களில், மேற்சொன்ன அனைத்து விசயங்களுடன், இந்துத்துவா ராஷ்டிராவாக இந்தியாவை மாற்ற முயலும் பாஜகவை வீழ்த்த விரிவான மதச்சார்பற்ற கூட்டணியை ஏற்படுத்தி நிறுவ வேண்டும். விரிவான முறையில் அனைத்து மதசார்பற்ற சக்திகளை கொண்ட மேடையை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த நாம் முக்கியமான பங்காற்ற வேண்டும்.
கட்சியின் சுயேட்சையான வலுவை அதிகரிப்பது, இடதுசாரி ஒற்றுமையை ஏற்படுத்துவது, மாற்றுக் கொள்கைகளுடன் இடது ஜனநாயக சக்திகளின் போராட்ட அணியை உருவாக்குவது, பாஜகவை தோற்கடிக்க விரி வான மதசார்பற்ற அணியை ஏற்படுத்துவது ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் இன்றைய சவால்களைச் சந்திக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தமிழ்நாடு மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தவும், மத சார்பற்ற சக்திகளை சேர்த்து பாஜக, அதிமுகவை வீழ்த்திய அடிப்படையில் மேலும் முன்னேறிச் செல்லவும், இந்தியாவை பாதுகாத்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்க வும் விவாதிக்க இம்மாநாட்டை தொடக்கி வைக்கிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். அவரது ஆங்கில உரையை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது தமிழாக்கம் செய்தார்.
தொகுப்பு: வே.தூயவன்