tamilnadu

img

உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது

சென்னை, செப். 4 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், சனாதனம் குறித்து தெரிவித்த  கருத்து, பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதுதான்.  கடந்த காலங்களில் வாய்மூடி கடந்து சென்ற பாஜகவும், ‘‘இந்துத்துவா’’ கும்பலும் தற்போது வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதித்து வருகின்றன. ஆதிப் பொதுவுடைமை சமூகம்  தகர்ந்து தனியுடைமை சமூக உரு வானபோது ஆதிக்க சக்திகளால் உழைக்கும் மக்களை பிரித்து, பிளவு படுத்தி வைக்கும் முயற்சிகள்  மேற்  கொள்ளப்பட்டன. அதில் இறுதியாக உருவானதும், பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதும் சனா தனக் கருத்தியலாகும்.  இது பகுத்தறிவுக்கு சிந்த னைக்கும் அறிவியல் கண்ணோட்டத் திற்கும் எதிரானது என்பதுடன் சமூக  வளர்ச்சி தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அறிவீனதுமாகும்.  

இதுதொடர்பாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசியது, இது சமய நம்பிக்  கையை இழிவு செய்யும் நோக்கம் கொண்டதல்ல என்பதை சாதாரண அறிவுள்ளோரும் அறிவர். ஆனால், பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு  மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள னர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அரசின் உள்  துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி,  தமிழ்நாடு தலைவர் கே.அண்ணா மலை வரை சமய நம்பிக்கை கொண்ட வர்களுக்கு மதவெறியூட்டும் மலி வான செயலில் இறங்கியுள்ளது.  வட மாநிலங்களில் உள்ள அரசு  அதிகாரத்தைப் பயன்படுத்த, புனை வுக் குற்றச்சாட்டுக்களை வழக்கு களாக பதிவு செய்து வருகிறது. இதன்  மூலம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் தனி நபர் மையப்பட்ட சர்வாதிகாரக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வஞ்சகச் செயலில் ஈடு பட்டு வருகிறது.  இந்த ஜனநாயக விரோதச் செய லுக்கு எதிராக ‘இந்தியா’ அணி நாடு  முழுவதும் தீவிரமான இயக்கங்களை மேற்கொண்டு முறியடிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.