tamilnadu

வாலிபர் சங்க நிர்வாகி அசோக் படுகொலை

திருநெல்வேலி, ஜூன் 16- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொரு ளாளர் அசோக் ஜுன் 12ம் தேதி சாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளி களை உடனடியாக கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்எஸ்ஏ நகர் ஊர் மக்கள் சார்பாக அன்று இரவே சாலை மறியல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுதினம் தமிழகம் முழுவதும் பரவ லாக அனைத்து மாவட்டங்களிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் போராட்டங்களும் ஆர்ப் பாட்டங்களும் நடைபெற்றது. அதே போல் திருநெல்வேலி மாவட்டத்தி லும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். ஆர்எஸ்ஏ நகர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அசோக் கின் குடும்பத்திற்கு இழப்பீடு, குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன் னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கலந்து கொண்ட சாலை மறி யல் நடைபெற்றது. அரசாங்கத்தின் சார்பில் எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் பெறப்பட்ட பின்பு தற்காலிகமாக மறியல் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று காலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யரின் முகாம் அலுவலகத்தில் சென்று அவரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம், நெல்லை தாலுகா செயலாளர் சுடலைராஜ் ஆகியோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்எஸ்ஏ நகரிலிருந்து சிவகுமார் ஸ்பின்னிங் மில் வரை பாதையினை ஏற்படுத்த நில ஆர்ஜிதம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அசோக்கின் குடும்பத்தில் ஒருவருக்கு மூன்று மாதத்திற்குள் அரசு வேலை உறுதி செய்யப்பட வேண்டும், அசோக்கின் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.50 லட்சம் விரைந்து வழங்கப்பட வேண்டும், ஆர்எஸ்ஏ நகர் மக்க ளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மயா னத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், திருநெல் வேலி மாவட்டத்தில் சாதிக்கு எதிரான பிரச்சாரத்தை முற்போக்கு இயக்கங் களுடன் இணைந்து அரசு நடத்த வேண் டும், கரையிருப்பு பகுதியை வன் கொடுமை தடுப்பு பகுதி (atrocity prone area) என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர் . மேற்கண்ட கோரிக்கைகளை அம லாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா சதீஷ் பிரபாகர் உறுதியளித் தார்.