நாமக்கல், செப். 19- ‘இந்தியர்’ என்ற புள்ளி நம்மை இணைக்கிறது; வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் நிலை யை மோடி தலைமையிலான பாஜக அரசு சிதைத்து வருகிறது என ஆதி வாசி மக்களின் உரிமைகளுக்கான அகில இந்திய மாநாட்டில் கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். ஆதிவாசி மக்கள் உரிமைகளுக் கான தேசிய அமைப்பின் 4ஆவது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் செவ்வாயன்று எழுச்சியுடன் துவங்கி யது. செப்.21 வரை மூன்று நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டில் 17 மாநி லங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், ஆதி வாசி உரிமைகளுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜிதேந்திர சவுத்ரி மற்றும் நிர்வாகிகள் பாபு ராவ், குலின் பாஸ்கி, பெ.சண்முகம், திருப்பதி ராவ், பி.டில்லி பாபு, சரவணன், பொன்னுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கேரள அமைச்சர்
இம்மாநாட்டை கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் உயிர் தியாகம் செய்தனர். ஆங்கிலே யர் ஆட்சியின் போது, வன நிலத்தின் உரிமையாளர்களாக இருந்த ஆதி வாசி மக்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விரட்டப் பட்டனர். நாடு முழுவதும் உள்ள ஆதி வாசி மக்கள் தங்களது நில உரிமைக் காக போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு ஆதி வாசிகளின் நிலங்கள் கை மாறின. ஆதி வாசி மக்கள் அவர்களின் நிலங்களை இழந்தது மட்டுமின்றி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பும் இல்லாமல் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே இருந்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த நோக்கத்தை அடைய, ஆதிவாசி மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகிறோம்” என்றார்.
பழங்குடி மக்களுக்கான நிதி குறைப்பு
“பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆதிவாசி மக்களின் நல னுக்கு எதிரான மசோதாக்கள் மற்றும் திருத்தங்களை கொண்டு வரு கிறது. இடதுசாரிக் கட்சிகளின் பலத்த நிர்ப்பந்தத்தால் 2006இல் இயற்றப் பட்ட வன உரிமைச் சட்டம் இதுவரை முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், பிரதமர் மோடி, அவரது கூட்டுக் களவாணிகளான அதானி மற்றும் அம்பானியின் நலன் கருதி, அவசர அவசரமாகத் திருத்தி வரு கிறார். வன நிலங்கள் தனியார் கார்ப்ப ரேட் கொள்ளைக்கு திறந்து விடப்படு வது மட்டுமின்றி, பாக்சைட், மெக்னீ சியம், லித்தியம் போன்ற இயற்கை கனிம வளங்களும் சூறையாடப்படு கின்றன. மறுபுறம் பழங்குடியினப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு குறைத்ததுடன், உயர் கல்விக்கான உதவித் தொகையை யும் திரும்பப் பெற்றுள்ளது” என்றும் அமைச்சர் ராஜீவ் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “ஒவ் வொரு ஆண்டும் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஆனால், பழங்குடி மக்கள் நலனுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. இதை இன்னும் மோசமாக்கும் வகை யில், ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப் படுவதோ அல்லது வேறு சில நோக்கங் களுக்காக பயன்படுத்தப்படுவதோ மடைமாற்றம் செய்யப்படுவது மட்டு மின்றி, சில சமயங்களில் அவை பயன் படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டு, ஆதிவாசி மக்களுக்காக ஒதுக் கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.
மணிப்பூர் பயங்கரம்
பாஜக ஆட்சியில் பழங்குடியின மக்களின் சமூக நலன் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து வந்து, பாலியல் துன்புறுத் திய வெட்கக்கேடான சம்பவம் நடந்தது. இது இந்தியாவுக்கு மட்டு மல்ல, உலகம் முழுவதற்கும் அவமான கரமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் கும்பல்களால் பழங்குடியின மக்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, தாக்கப் பட்டு, கொல்லப்படும் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. இந்த கொடூர மான மனிதாபிமானமற்ற தாக்குதல் களுக்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த பிறகே பிரதமர் நாடாளு மன்றத்தில் ஒப்புக்காக பேசினார் என்றும் அமைச்சர் ராஜீவ் வேதனை தெரிவித்தார்.
பொதுத்துறைகள் 4.5லட்சம் பேரின் வேலை பறிப்பு
நாட்டின் வேலையின்மை 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை கடுமை யாக அதிகரித்திருக்கிறது. இதே வேளையில் பொதுத்துறை நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர் களில் 4.5 பேர் லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை நிய மனங்களும் இல்லாத நிலையில் பட்டியல், பழங்குடி சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு கொள்கை வெறும் கண் துடைப்பாக மாறி இருக்கிறது எனவும் ராஜீவ் குறிப்பிட்டார்.
மோடி அரசும் கேரள அரசும்
பல்வேறு இனக்குழுக்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் நிறைந்து இருந்தாலும் இந்தியர் என்ற ஒரு புள்ளி நம்மை இணைக்கிறது. ஆனால் தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. சாதி மற்றும் மதங்களின் பெய ரால் மக்களை பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்து வருகிறார்கள். மனு ஸ்மிருதியின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ள பாஜகவினர், நாட்டின் பிராந்திய மொழிகளை அழிக்கும் நோக்கில் ஒரே நாடு ஒரே மொழி என்று பேசி வருகின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளு நரை கொண்டு மாநில அரசின் அதி காரங்களை முடக்கப் பார்க்கின்றனர் என விமர்சித்த அமைச்சர் பி.ராஜீவ், அதேநேரத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளத்தில் நடை பெற்று வரும் சாதனைகளைப் பட்டிய லிட்டார். “அனைவருக்குமான உரிமை என்ற அடிப்படையில், கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும் இணைய வசதி கொண்டு செல்லப்பட்டுள்ளது. கேரளாவில் ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களில் பைபர் ஆஃப்டிகல் நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் முதுகலை வரை பயில தலா 25 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2025க்குள் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கவும், வறுமையில்லா கேரளம் என்ற முன்னோடித் திட்டத்துடன் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது” என அமைச்சர் கூறினார். ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு, எப்போதும் பழங்குடி யின மக்களின் பாதுகாவலராக இருந்து வருகிறது. அவர்களுக்கு நிலம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ளது. இவ்வமைப்பை பலப்படுத்துவோம், ஆதிவாசிகளின் உரிமைகளை வென்றெடுக்க இம்மாநாடு பயன்படும் என்றும் அவர் கூறினார்.
தியாகிகளுக்கு செவ்வணக்கம்
முன்னதாக, தியாகிகள் நினைவு ஜோதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் கொடியை அகில இந்திய தலைவர் பாபுராவ் ஏற்றிவைத்து மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். பின்னர், தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய துணை தலைவர் திருப்பதிராவ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்புக்குழு தலைவர் பி.டில்லிபாபு அனைவரையும் வரவேற்றார்.
செய்தி, படங்கள் : கார்த்திக், கோவை