சாதனை மணிமகுடமெனத் திகழணும்!
இளையராஜாவை வாழ்த்திய முதல்வர்
இசைஞானி என ரசிகர்களால் கொண் டாடப்படும் இளையராஜா, சில மாதங்க ளுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான ஜமா திரைப்படம் ரசிகர்களி டம் வரவேற்பைப் பெற்றது. மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங் களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, இளையராஜா தான் இசைய மைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய் கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசை யமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்ய வுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டூடியோ வுக்கு நேரில் சென்று அங்கு ராஜாவை சந்தித்து நினைவுப்பரிசை வழங்கி சிம்பொனி இசைக்கான தன் வாழ்த்து களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியா விலேயே யாரும் செய்யாத சாதனை யாக, மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்த வுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ் நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந் தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளைய ராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.