23 பேரின் உயிரைப் பறித்த ‘நீட்’ தேர்வு
சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்ட ‘எண்ணித் துணிக’ எனும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் ஒரு மாணவி யின் தந்தை நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என கேட்டார். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “நீட் விலக்கு கொடுப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசி யமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஞாயிறன்று திமுக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியது. இந்த போராட்டத்தில் நீட் தேர்வில் உயிர் நீத்த மாணவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மொத்தம் 23 பேர் இந்த நீட் தேர்வால் பலியாகிவிட்டனர்.
அமலாக்கத் துறை சோதனை நிறைவு
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிறன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீரியமில்லாத கொரோனா என்ப தால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப் பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
மே 24-இல் மலர் கண்காட்சி!
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 24 ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவத்துள்ளார். 9 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற வுள்ளன.
ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் சனிக்கிழமை சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக விழுந்த விபத்தில், 5 பேர் உயி ரிழந்ததை அடுத்து தமிழ்நாடு அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாமகவில் நெருக்கடி சூழல்
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் 2 ஆவது நாளாக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார். இந்நிலையில், பாமகவில் நெருக்கடி யான சூழல் உருவாகி இருப்பதாக திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு சனிக் கிழமை பேட்டியளித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
திருவோணம் அருகே அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் பலி
தஞ்சாவூர், மே 18- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. நெய்வேலி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்த போது, பட்டாசு வெடித்து 2 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவ லறிந்த, வாட்டாத்திக்கோட்டை காவல்துறை யினர் மற்றும் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தர மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வை யிட்டனர். மேலும், கறம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையிலான தீயணைப்பு மீட்பு படை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு வெடி விபத்தில் உடல் சிதறி பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோரது உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பந்தமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.
காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் பயணித்த ஜப்பானியர்
நாகப்பட்டினம், மே 18 - கப்பலில் காலாவதியான பாஸ்போர்ட்டு டன் பயணித்த ஜப்பானியரிடம் உளவுத் துறை, சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை பன்னாட்டு துறைமுகத்தில் இருந்து மே 16 அன்று குடியுரிமை சோதனை உள்ளிட்ட சோதனைகள் முடித்து, 85 பய ணிகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. காங்கே சன் துறைமுகத்துக்குச் சென்றதும் கப்பலில் வந்த பயணிகளை இலங்கை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காலாவதியான பாஸ்போர்ட்டில் இந்தியா வைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசோ என்ப வரும் வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை அதிகாரிகள், 2 பேரையும் மே 16 அன்று மாலை, அவர்கள் வந்த கப்பலி லேயே மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர். நாகை துறைமுகத்திற்கு வந்த 2 பேரி டமும் உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசார ணையில், டைசோ இந்தியாவில் தொழில் நிறு வனம் நடத்தி வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை இத னால் விமானத்தில் செல்ல முடியாமல், நாகை யிலிருந்து கப்பலில் இலங்கை சென்று, அங்கி ருந்து ஜப்பான் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில் ஒன்றிய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.