tamilnadu

img

தஞ்சாவூர் மாநில அளவில் 13 ஆவது இடம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் மாநில அளவில் 13 ஆவது இடம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பெரம்பலூர், மே 8 - பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளிவந்த நிலை யில் பெரம்பலூர் மாவட்டத்தில், 12 ஆம் வகுப்பு  அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில்  முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை  படைத்துள்ளனர். இதில் மாணவர் விக்னேஸ்வ ரன் 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். மாணவி ஸ்ரீ ஹரிணி 594 மதிப்பெண் பெற்று 2 ஆம்  இடத்தையும், மாணவி தர்சிகா 592 மதிப்பெண் ணும், மாணவி ஷர்னிகா 592 மதிப்பெண் ணும், மாணவி டியுசிலின் பெமினா 592 மதிப்பெண்ணும் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். கணித பாடத்தில் 47 பேரும், வேதியியல் பாடத்தில் 38 பேரும், உயிரியல் பாடத்தில் 21 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 8 பேரும், இயற்பியல், கணினி பயன்பாடுகள் பாடத்தில் தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக 3 மாணவர்கள் மூன்று பாடங்களிலும், 21 மாணவர்கள் இரண்டு பாடங்களிலும், 116 மாணவர்கள் ஒரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மாநில, மாவட்ட அளவில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர்  சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந் தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி னர். நிகழ்ச்சியின்போது பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனி ருந்தனர்.

அறந்தாங்கி செலக்சன் பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

அறந்தாங்கி, மே 8 - பிளஸ் 2 பொதுத்தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி எம்.குட்டீஸ்வரி 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி எஸ்.பிரித்திகா 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவர் என்.சூரிய பிரகாஷ் 579 மதிப்பெண்கள், கே.யதின்ராஜ் 579 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணாக்கர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 73 மாணாக்கர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அதிக பாடங்களில் குறிப்பாக கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்று இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.  சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் கண்ணையன், பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் பாராட்டி கெளரவப்படுத்தினர்.