திருநெல்வேலி, மே 31-நெல்லையில் பி.எஸ்.கே. நகர் மற்றும் ராமலிங்கனார் குடியிருப்போர் நல சங்கத்தின் பொது குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்க தலைவர் டாக்டர்கே.சேகர் தலைமை தாங்கினார். ராமநாதன் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் டி.ஜெயப்பாண்டி, செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். பொருளாளர் மாணிக்கம் வரவு- செலவுஅறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அனைத்து குடியிருப்போர் நல சங்ககூட்டமைப்பு செயலாளர் டி.கோபாலன் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ பா.வேல்துரை சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். புதிய தலைவராக டாக்டர் கே.சேகர், செயலாளராக டி.ஜெயப்பாண்டி, பொருளாளராக பவுல் மற்றும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், நிர்வாககுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் பவுல் நன்றி கூறினார்.