tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்

வன்முறையை தூண்டியதை ஒப்புக்கொண்டு மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பத வியை ராஜினாமா செய்தார். பைரேன் சிங் ராஜினாமா செய்து 4 நாட்கள் ஆன பின்பும் முதலமைச்சர் பொறுப்பில் அமர பாஜக எம்எல்ஏக்கள் யாரும் முன்வர வில்லை. இதனால் வியாழனன்று இரவு மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

த்தப்பட்ட 6 மணிநேரத்தில் மணிப் பூர் மாநிலத்தில் வழக்கம் போல  வன் முறை, பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலை நகர் இம்பால் அருகே தடை செய்யப் பட்ட அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவா திகளை மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்ததாக செய்தி வெளியானது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்ல ; அவர்கள் பழங்குடியினங்களை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இத னால் மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதியில் (குக்கி, நாகா பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள்) பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

சிஆர்பிஎப் முகாமிலும் பதற்றம்

இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்சங் பகுதியின் மத்திய ரிசர்வ் பாது காப்புப் படை  (சிஆர்பிஎப்) வீரர்களின் முகாமில் ஹவில்தார் சஞ்சய் குமார் தனது துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த சம்ப வத்தில் ஒரு உதவி ஆய்வாளர் உள்பட  இரண்டு வீரர்கள் பலியாகினர். மேலும் முகாமில் இருந்த 8 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர்.
 

பொது நிதியைச் சூறையாட பாஜக எம்எல்ஏக்கள் மோதல்

தில்லியில் பாஜக எம்எல்ஏக்க ளுக்குள் துறை ஒதுக்கீட்டில் உட்கட்சி மோதல் நடைபெற்று வரு வதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,“பாஜக தலைவர்கள் பொது நிதி யைச் சுரண்டுவதற்காக அமைச்சர் பதவி களுக்காகச் சண்டையிட்டு வருகின்றனர். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை. முந்தைய ஆம் ஆத்மி  நிர்வாகத்தின் காரணமாக தில்லி அரசிடம் பணம் இல்லை என்றும் கூட பாஜக கூறும்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பது தனிப்பட்ட விஷயமா?

பிரதமர் மோடிக்கு  ராகுல் காந்தி கண்டனம்

அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதி பதி டிரம்ப் உடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தொழிலதிபர் அதானி யின் ஊழல் விவகாரம் குறித்து கேட்ட  கேள்விக்கு,”இரு நாடுகளைச் சேர்ந்த  இரு முக்கியத் தலைவர்கள் சந்திக் கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவ காரங்களைப் பேசுவதில்லை” எனக் கூறி மழுப்பினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறு கையில்,”உள்நாட்டில் கேள்வி கேட்டால் பிரதமர் மோடி அமைதியாகி விடுவார். அதே போல வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விஷய மாகிவிடுகிறது. அமெரிக்காவில் கூட மோடி, அதானியின் ஊழல் குற்றச் சாட்டுகளை மூடி மறைக்கிறார். மோடிக்கு நண்பரின் பாக்கெட்டை நிரப்புவதும், ஊழல் செய்வதும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.