ரெட்மாண்ட்/வாஷிங்டன், ஜூலை 19 - உலகின் மிகப்பெரிய கணிப்பொறி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-டின் ‘விண்டோஸ் - 10 மென்பொருள்’ தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் பல சேவைத் துறைகளில் தொழில் நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டன. விண்டோஸ் மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக பயனர் களின் கணினிகள் தாமாக அணைந்து அல்லது அணைந்து மீண்டும் துவங்கி ‘ப்ளூ ஸ்க்ரீன் டெத்’ (Blue Screen of Death) என தோன்றியது. இந்த திடீர் தொழில் நுட்ப குளறுபடியால் உலகம் முழுவதும் ஐடி துறை, வங்கி, விமானம் மற்றும் செய்தித் துறைகள், அரசு அலுவலங் கள் கடுமையான முடக்கத்தை சந்தித்தன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் விமா னங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசர சேவையான 911 சேவை முடங்கியது. விமானச் சேவையில் பெரும் பாதிப்பு விமானங்கள் புறப்படும் செய்தி அறிவிக்கும் டிஜிட்டல் பலகை கூட முடங்கியது. இதனால் வெள்ளை நிற பலகை வைக்கப்பட்டு விமான நிலைய ஊழியர்கள் விமானங்கள் புறப்படும் தகவலை கையால் எழுதி வைத்தனர். இவ்வாறு உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் சேவை பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் 170 விமானங்கள் ரத்து!
மைக்ரோசாப்ட் மென்பொருள் செய லிழப்பால் சென்னை, தில்லி, மும்பை ஆகிய இடங்களில் விமானச் சேவை காலை 11 மணி முதலே பாதித்தது. இந்தியா முழுவதும் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பங்குச்சந்தை வர்த்தகம், உலகின் பிரபலமான “ஸ்கை நியூஸ்” சேவையும் இந்த தொழில் நுட்ப கோளாறால் முடங்கியது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிவி, ரேடியோ, பல்பொருள் அங்காடிகள், இங்கி லாந்தின் மருந்து விற்பனை அமைப்பு என மைக்ரோசாப்ட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வணிக மற்றும் சேவைத் துறைகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்து முடங்கின. இதுதொடர்பாக பதிலளித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த பிரச்னை முதலில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் தோன்றியது. கிரௌடுஸ்ட்ரைக் (Crowdstrike) ஆன்டி வைரஸ் அப்டேட்டில் ஏற்பட்ட பிரச்சனை யால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி கள் ஏற்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மென்பொருள் உள்ள கணினிகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளன. இந்த பிரச்சனையில் ஹேக்கிங் முயற்சி கண்டறியப்படவில்லை. இதனால் யாருடைய தரவுகளும் திருடு போகாது. குளறுபடிகளுக்கு விரைந்து தீர்வு காண முயற்சிகள் நடக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, மைக்ரோசாப்ட் மென் பொருள் செயலிழப்பு விவகாரத்தில், தங்களது நாட்டின் சொந்த மென்பொருட்களை பயன்படுத்தி வரும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படவில்லை.