கனிம நிலங்களுக்கு வரி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்
கனிமங்களைக் கொண்டுள்ள நிலங் களுக்கு வரி விதிப்பது, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணை யம் தொடர்பான வழக்கில், கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாச னத்தின் 7-ஆம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. எனவே, சுரங்கங்களைக் கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்டம் இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது’ என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில்- பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் துவங்கி ஆற்று மணல், களிமண் என மொத்தம் 30 வகை கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா, சட்டப்பேரவை யில் 2024 டிசம்பர் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடி வடைந்த நிலையில், அதற்கு முன்ன தாகவே தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளதாக தெரி வித்த தமிழக அரசு, தேர்தல் நடத்தப்படும் வரை, அந்த ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டது. பின்னர், ஜனவரி 11 அன்று தனி அலுவலர்களை நியமிப்பதற்கான மசோதாவையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஆனால், சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட இரண்டு சட்டத்திருத்தங் களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு 2 மாதங்களுக்கு மேலாக ஒப்புதல் அளிக்கா மல் வைத்திருந்த ஆளுநர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த இரண்டு மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.