செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் 3 ஆவது மாநில மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கம் முடிவு
வேலூர், மே 6 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாட்டை வருகிற செப்டம்பரில் திண்டுக்கல்லில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், சோலை யார் பேட்டையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் மு.பரமேஸ் வரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியன் வர வேற்றார். மாநில துணைத் தலை வர் ப.திரவியம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சா.ராசு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க துணைத் தலைவர் த.பாண்டி யன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கையையும், பொருளா ளர் மு.மகாலிங்கம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தீர்மானம் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாட்டை 2025 செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. காப்பீட்டுத் திட்டத்தில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு அரசின் ஆணைக்கேற்ப ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பிற சிகிச்சைகளுக்கும் முழு சிகிச்சை செலவினத் தொகையை வழங்கி, கட்டணமில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தில் இணைந்துள்ள அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மே 20 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டது.