tamilnadu

img

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம  உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 

பிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்கக் கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33 இல் உரிய திருத்தத்தை வெளியிட்டு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் கோப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தில் நிலுவையாக உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  பாபநாசம் தாலுக்கா அலுவலகம் வளாகத்தில் நடந்த போராட்டத்தில் வட்டச் செயலர் மனோகரன், முன்னாள் மாநிலச் செயலர் முருகேசன், மாநிலச் செயலர் கார்த்திக், வட்டப் பொருளாளர் மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரணி வித்யாலயா பள்ளிக்கு மாநில அளவில்  தலைசிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிக்கான விருது

பிரெயின் பீட் தனியார் நிறுவனம் அண்மையில் நடத்திய தலை சிறந்த பள்ளிகளுக்கான கள ஆய்வில், கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் தலை சிறந்த சிபிஎஸ்இ பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.  ஒன்றிய அரசின் பொதுத் தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகளில் தேசிய தொடர் சாதனைகளுக்கான கல்வியில் தலை சிறந்த பள்ளி விருது, கற்றல் கற்பித்தலில் காலத்திற்கேற்ற புதுமை செயல்பாட்டிற்கான தலை சிறந்த பள்ளி விருது, கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தும் தலை சிறந்த பள்ளிக்கான விருது ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்று, மாநில அளவில் தலை சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாநில அளவில் தலைச்சிறந்த பள்ளிக்கான விருது, சிறந்த கல்வியாளருக்கான விருது, கல்வி, விளையாட்டு, அறிவியல், ஒலிம்பியாட், பன்முகத்திறன் திருவிழா என அனைத்திலும் சர்வதேச, தேசிய, மாநில சாதனைகளை வாழ்த்தும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா. மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர். சொ. ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள், இருபால் ஆசிரியர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.