சென்னை, ஜன. 20 - பிற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு வர், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) இயக்குநர் பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என்றும், காமகோடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளனர். கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், “ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையின் அடிப்படையில் பேசி யிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறு நீரை ஆராய்ச்சி செய்ததில் கோமியம் மனி தர்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல; இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. அதை காமகோடி போன்றவர்கள் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது. வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்தே காமகோடி பேசியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், கோமி யத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டு பிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும் நிலையில், புகழ்பெற்ற ஆராய்ச்சி மைய மாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருக்கும் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிக் கிறோம் என்று கூறியுள்ளார்.