tamilnadu

img

கார்ல்சனை வீழ்த்தி வரலாறு படைத்த தமிழ்நாடு வீரர் குகேஷ்

கார்ல்சனை வீழ்த்தி வரலாறு படைத்த தமிழ்நாடு வீரர் குகேஷ்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்

ஐரோப்பிய கண்டத்தின் நார்வே நாட்டில் “நார்வே கிளாசிக்கல்” என்ற பெயரில் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா - தமிழ்நாடு), 5 முறை உலக சாம்பியன் வென்ற மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்ற நிலையில், ஜூன் 1 அன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார். இதுவே மாக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் வெற்றி ஆகும். இந்த வெற்றிக்கு பிறகு கார்ல்சன் மேஜையை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், குகேஷ் வெற்றிக்கு பிறகு மரியாதையுடன் நடந்து, வெற்றிபெறும் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வெற்றி அவரது வாழ்க்கையின் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  வெற்றிக்குப் பின் குகேஷ்,”100 முறை விளையாடினால் 99 முறை நான் தோற்றிருப்பேன். இது எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள். நான் அவருக்கு எதிராக தந்திரமான நகர்வுகளை விளையாட முயற்சித்தேன், அதிர்ஷ்டவசமாக கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடிக்குள் சிக்கினார். இந்தத் தொடரில் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நேரம் இல்லாத நெருக்கடிகள் மிகவும் கட்டுக் கடங்காமல் போகலாம் என்பதுதான்” என்று அவர் கூறினார். குகேஷின் அமைதியான மற்றும் நிதானமான அணு குமுறை, கார்ல்சனின் எதிர்வினைக்கு நேர்மாறாக இருந்தது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 கார்ல்சனுக்கு எதிரான வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில் உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் பேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். இந்நிலையில், கார்ல்சனை முதல்முறையாக வீழ்த்திய குகேஷுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.