தூத்துக்குடி, நவ.13- தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கண் டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கீ காரம் பெற்றது). பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கியா னது 568 ஆவது கிளையை நிழலி - திருப்பூர் மாவட்டத்தில் ஏடிஎம் வசதியுடன் புதனன்று துவக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் நிழலியில் 568 ஆவது கிளையை அவினாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தலைவர் கே.எம். தங்கராஜ் துவக்கி வைத்தார். வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையா ளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள். பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரி வாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வரு கிறது. அதன் தொடர்ச்சியாக புதனன்று 568 ஆவது நிழலி திருப்பூர் மாவட்டம் கிளையை ஏடிஎம் வசதியுடன் துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளை களை இந்தியா முழுவதும் துவங்கிட திட்ட மிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழா மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழமை யான தனியார் துறை வங்கியாகும். தூத்துக் குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டு களுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவை யிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதி லும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங் களில் 568 கிளைகள் மற்றும் 12 மண்டல அலு வலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக் கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறை வான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.tmb.in என்னும் இணையதள முகவரியை பார்வை யிடலாம்.