தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் வெற்றி!
விழுப்புரம், ஜூன் 2 - காணை ஒன்றியம், பழைய கருவாட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல ஆண்டு களாக நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியம் பழைய கருவாட்சி கிராமத்தில் 300 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு புறம்போக்கில் 118/2பி-ல் சாலை அமைக்கக் கோரி பல முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தும் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனடியாக புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் பட்டை நாமம் போட்டு காத்தி ருக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்ட ங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தின் பலனாக வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தனி நபர் ஆக்கிரமிப்பு பிடியி லிருந்த அரசு புறம்போக்கு இடங்களை மீட்டு, கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு செய்து விவசாயிகள் பயன்பாட்டு சாலையாக மாற்றியமைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன் உட்பட ஏராள மானோர் இந்த வெற்றிக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரி வித்துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இதனை வரவேற்றுள்ளனர்.