tamilnadu

img

தொழில் வர்த்தக சங்க பவள விழா நிறைவு நிகழ்வில் தமிழக முதல்வர் பங்கேற்பு

மதுரை, ஜன.22-  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க  பவள விழா புதனன்று சங்கத் தலை வர் ஜெகதீசன் தலைமையில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், கே.ஆர்.பெரியகருப்பன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாக ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் விக்கிரமராஜா, மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஸ்ரீதர், ஆலோசகர் நீதிமோகன், மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த அமைப்பு உருவான ஆண்டும், தலை வர் கலைஞர் பிறந்த ஆண்டும் ஒரே  ஆண்டுதான். அவருடைய நூற்றாண் டில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மும் நூற்றாண்டு நிறைவு விழா காண்ப தற்காக என்னுடைய வாழ்த்துகளை யும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசைப் பொறுத்த வரைக்கும், வணிகர்களுக்கு ஆதர வாக, உங்கள் நலனுக்காக செய்து வரக்கூடிய பணிகள் எல்லாம் நன்றாகத்  தெரியும். அதேபோல், நம்முடைய அர சின் முயற்சிகளுக்கெல்லாம் துணை யாக இருக்கும் அமைப்பாக நீங்கள்  இருக்கிறீர்கள். நீங்கள் ஆற்றி வரக்  கூடிய பணிகள் எல்லாம் பாராட்டுக்குரி யது.  5,500 உறுப்பினர்கள், 250 இணைப்  புச் சங்கங்கள் என்று இந்தியாவி லேயே பெரிய வணிகர் அமைப்பாக  இருக்கும் நீங்கள், வணிகர் நலனுக்காக வும், சமுதாய நலனுக்காகவும் மிகவும்  சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கி றீர்கள். சமச்சீரான, எல்லாருக்கும் எல்லாம்  என்ற அடிப்படையிலான நம்முடைய அரசின் பயணத்தில், வணிகப் பெரு மக்களான உங்களுடைய ஆதரவு மிக  மிக முக்கியம். எங்கள் முயற்சிகளுக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருப்  பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கி றது. அதேபோல், உங்களின் வளர்ச்சிக் கும் நம்முடைய அரசு எப்போதும் உறு துணையாக இருக்கும் என்று நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  இங்கே வைத்திருக்கக்கூடிய கோரிக்கையை பொறுத்தவரைக்கும், நிச்சயமாக, உறுதியாக பரிசீலிக்கப் பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறினார். சங்கத்தின்  தலைவர் ஜெகதீசன் பேசுகையில், “தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திற்கு முன்னாள் முத லமைச்சர் கலைஞர் 3 முறை வந்து சிறப்பு செய்துள்ளார். சங்க கட்டிடம் கட்டுவதற்கு வணிகவரித்துறை சார்  பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. வணிகர் இறந்து விட்டால் ரூ.1 லட்சம் ரூபாய் நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையால் 8,200 புதிய தொழில் முனைவோர்கள் தொழில்களை தொடங்கியுள்ளனர். 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள  மதுரை - தூத்துக்குடி தொழில் வழித் தடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நடைமுறைக்கு கொண்டு வர வேண் டும். மதுரை விமான நிலைய விரி வாக்கத்தில் விமான ஓடுபாதைக்கு அண்டர் பாஸ் முறையை கொண்டு வரு வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மறுபரி சீலனை செய்ய வேண்டும்” என கூறி னார்.