சென்னை,ஜன.16- சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது சி.நா.மீ. உபயதுல்லாவிற்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்க டாசலபதிக்கும். பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா வுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விருதுகளுடன் தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற் கான தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரைக்கும், முதல்வர் வழங்கினார். இவ்விருதுடன் விருதாளர் களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டது.