சாத்தூர், ஜன.8- சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5 ஆம் தேதியன்று நிகழ்ந்த பட் டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அஜாக்கிர தையாக செயல்பட்டு உயிரி ழப்பை ஏற்படுத்தியதாக பட்டாசு ஆலை உரிமத்தை தற் காலிகமாக ரத்து செய்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் மேக நாத ரெட்டி நடவடிக்கை எடுத் துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை முடிவிற்குப் பின்னர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ஆட்சி யர் தெரிவித்துள்ளதாக கூறப் படுகிறது.