tamilnadu

img

பின்னணியில் வேறு நலன்கள் இருப்பதாக சந்தேகம்

கண்ணூர், அக்.25- கேரள ஆளுநரின் நடவ டிக்கைக்கு பின்னால் வேறு சில நலன்கள் இருப்பதாக கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் சந்தேகம் தெரி வித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கண்ணூர் துணை வேந்தர் கூறுகையில், காரணம் காட்டும் நோட்டீசுக்  கான பதில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக துணை வேந்தரை நியமித்தவர்கள்  தான் பதில் சொல்ல முடியும் என்றார். கேரளாவில் கடந்த காலங்களில், யுஜிசி அளவு கோல்களின்படி நிர்ணயிக்கப்பட்ட தகுதி கூட இல்லாத துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அப்படியில்லை. பல்கலைக்  கழக சட்டத்தின்படி அல்லது யுஜிசி வழிகாட்டுதல் களின்படி செய்யப்பட்ட நியமனம் சட்டப்படி செல்  லுபடியாகுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியா ளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணைவேந்தர், மக்களை ஆளுநர் தொடர்ந்து விமர்சிக்கும்போது, அவர் மீது தவறான புரிதல் ஏற்படும் என்றார்.