நாட்டின் 51ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்களன்று பொறுப் பேற்றார். இந்நிலையில், சஞ்சீவ் கன்னா தனது முதல் அறிக்கையில், “நீதித்துறை என்பது ஆளும் அமைப்பின் ஒருங்கிணைந்த, தனித்துவமான மற்றும் சுதந்திரமான அமைப்பாகும். அரசியலமைப்பு நீதித் துறை மீது நம்பிக்கை வைத்துள்ளது. அனைவரையும் சமமாக நடத்துவதன் அடிப்படையில் நீதி வழங்கும் கட்ட மைப்பில் செல்வம், அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வெற்றிபெறும் வகையில் சமமான வாய்ப்பு மற்றும் பக்கச்சார்பு இல்லாத தீர்ப்பு உள்ளிட்டவைகள் தேவைப்படுகின்றன. நமது நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க செய்வது நமது அரசிய லமைப்பின் கடமையாகும். குறிப்பாக இனி வழக்குகளின் அவசர விசாரணை க்கு வாய்மொழி கோரிக்கைகளுக்கு அனுமதி இல்லை. மின்னஞ்சல் அல்லது எழுத்துப்பூர்வமான கடிதம் அளிக்கப்பட வேண்டும். அவசர தேவைக்கான கார ணங்களை மட்டும் கூறிப்பிட்டால் மட்டும் போதும்” என அவர் கூறினார். சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் 2025 மே 13ஆம் தேதி முடிவடையும் நிலையில், 6 மாதங் கள் மட்டுமே தலைமை நீதிபதியாக அவர் பதவி வகிப்பார் என்பது குறிப்பி டத்தக்கது.