ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரட்டைத் தங்கத்தை வென்றுள்ள இந்திய ஆண்கள் & பெண்கள் அணியினருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஹங்கேரியில் வரலாறு படைத்தனர் இந்திய செஸ் அணியினர் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய அணி சாதனை!
45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்தல். இரட்டைத் தங்கத்தை வென்றுள்ள இந்திய ஆண்கள் & பெண்கள் அணியினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.