tamilnadu

img

நவாஸ் கனி எம்.பி-க்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து!

கடந்த 5 ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு , தனது சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கி வரும் நவாஸ் கனி எம்.பி-க்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கதில் கூறியதாவது:
“கொடையுள் அருங்கொடை கல்விக்கொடை அக்கொடை கொடைகளில் எல்லாம் தலை. என்ற புதிய குறளுக்கு உதாரணமாக திகழ்கிறார் நண்பர் நவாஸ்கனி எம்.பி.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் ஒரு கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எம்பி நவாஸ் கனி தனது சொந்த நிதியிலிருந்து தொடர்ந்து கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுகான கல்வித்தொகை வழங்கும் நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமைத் தாங்கினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். 
சிறப்பு விருந்தினர்களாக நானும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கேஏஎம் முகமது அபுபக்கர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றோம்.
“அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப தொடர்ந்து கல்விப்பணி செய்யும் நவாஸ்கனிக்கு வாழ்த்துகள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.