tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

மாணவர்கள் வாசிப்பு  திறன் ஆய்வு 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கள்ளக்காத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கலாராணி தலைமையில் ஆவுடையார் கோவில் வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துராமன் ஆகியோர் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் நூறு சதவீதம் வாசிப்புத்திறன் பற்றியும் கணிதப் பாடத்தில் அடிப்படை திறன்கள்யும் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை ஆய்வு செய்தனர்.  முன்னதாக தலைமை ஆசிரியர் சாவித்திரி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் ஆசிரியர் அங்கப்பன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில், மாவட்ட கல்வி அலுவலர் முன்பு, தனது வாசிப்பு திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை கல்வி அலுவலர் கலாராணி வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நாகர்கோவில்-தாம்பரம் ரயில் பெட்டிகளின் அமைப்பில் மாற்றம்

ரயில் வண்டி எண் 06011-ன் நேர மாற்றங்கள் மற்றும் ரயில் வண்டி எண் 06011/06012 நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பெட்டிகளின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் வண்டி எண் 06011/06012 நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்-ன் மாற்றப்பட்ட பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டாம் நிலை பெட்டி, 6- ஏசி மூன்றாம் நிலை பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி(மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வடிவமைப்பு), 1- உணவு பெட்டி மற்றும் 1- பொருட்கள் வைக்கும் வசதியுடன் கூடிய பிரேக் வேன் என மாற்றப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்து  ஓட்டுநர் பணி  புதுகை ஆட்சிரிடம்  திருநங்கைகள் மனு

புதுக்கோட்டை, ஏப்.5-  புதுக்கோட்டையில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த இரு திருநங்கைகள், தங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாதாந்திர திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். திருநங்கைகள் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் அசீனா, ரெ.ஷிவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த திருநங்கைகள் எஸ். ஸ்ரீதேவி, எஸ். கலைதேவி ஆகியோர் தங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.  இந்த கோரிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, ஏற்கெனவே விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு தனி குடும்ப அட்டை வழங்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் க.ந. கோகுலப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அ. ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.