மதுரை, ஜுன் 12- எல்பிஎன் நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றக் கோரி மதுரையில் திங்களன்று ஆதி தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திருச்சிராப்பள்ளியை தலைமை யிடமாக கொண்ட எல்பிஎன் நிதி நிறுவனம் மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள், ஓய்வூதி யர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ஒரு மடங்கு பணம் செலுத்தினால் மூன்று மடங்கு பணம் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் பணத்தை மோசடி செய்த எல்பிஎன் நிதி நிறுவனத் தலை வர்கள் அழகர்சாமி, பாபு, ராஜப்பா, இளங்கோ, ஜெ.ஜெ.ராம், சாகுல் ஹமீது, ரமேஷ், அறிவுமணி ஆகி யோரை கைது செய்ய வேண்டும். பொதுமக்களின் பணத்தை அவர்களி டம் இருந்து திரும்பப் பெற்றுத் தரவேண்டுமென வலியுறுத்தி ஆதி தமிழர் கட்சி நிறுவன தலைவர் கு.ஜக் கையன் தலைமையில் திங்களன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய கு.ஜக்கையன், “எல்பிஎன் நிதி நிறுவன மோசடி வழக்கை பொருளாதாரக் குற்றப் பிரிவிலிருந்து சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்கள் புதிதாகத் தொழில்கள் தொடங்க அனுமதியளிக்கக் கூடாது. எல்பிஎன் நிதி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்” என்றார்.