சேலம், ஜூன் 28 - பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரி வித்து மதச்சார்பற்ற கட்சிகள் கருப்புக் கொடி காட்டி ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களின் வாழ்வுரிமை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மசோதாக்களில் கையெழுத்திடாமல் இழுத்தடித்து வரு கிறார். அதேநேரத்தில், ஆர்எஸ்எஸ் பிரச்சா ரத்தை முழுநேர தொழிலாக செய்கிறார்.மாணவர்களிடம் அறிவியலை கொண்டு சேர்ப்பதற்கு மாறாக அபத்தங்களை கொண்டு சேர்க்கும் வேலையை செய்து வரு கிறார். இதற்கு தமிழக முற்போக்கு அர சியலை முன்னெடுக்கிற இயக்கங்கள் தங்களது எதிர்ப்புகளை தொடர்ந்து வெளிப் படுத்தி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எந்த இடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றாலும் அங்கே வலுமிக்க போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது.
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலை க்கழகத்தின் 21 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி அருகே சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட விடு தலைக் கழகம்உள்ளிட்ட இயக்கங்களின் ஊழி யர்கள் கருப்புச் சட்டையுடன் திரண்டனர். மதச்சார்பற்ற கட்சிகளின் கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் குவிக்கப்பட்டனர்.
ஆவேச முழக்கம்
இந்த தடைகளை உடைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தபோது, தமிழக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். சேலம் மாவட்டத்தை விட்டுதிரும்பிப் போ, தமிழக மாணவர்களுக்கு பட்டம் வழங்க உங்களுக்கு தகுதி இல்லை என ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, போலீசார் போராட்டத் தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, பி.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.