நீர்நிலை புறம்போக்கை அகற்றுவதை கைவிடுக! சிபிஎம் தலைமையில் மலைவாழ் மக்கள் மனு
அரியலூர், ஜூன் 4 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சலுப்பை ஊராட்சிக்கு உட்பட்ட பட்டவர்த்தி கிராமத்தில் சர்வே எண்.155, அல்லி ஏரிக்கு உட்பட்ட நீர்நிலை புறம் போக்கில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 6 தலைமுறைகளாக குடிசை வீடுகளில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், நீர்நிலை புறம் போக்குகளை அகற்ற வருவாய்த் துறை மூலம் உத்தரவு ஆணை கடந்த 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, தங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், நீர்நிலை புறம் போக்கை அகற்றும் போக்கை கை விட கோரி மலைவாழ் மற்றும் தாழ்த்தப் பட்டோர் இன மக்கள் ஒன்று சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், வட்டாட்சியர் அலுவல கத்தில் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்கிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “150 ஆண்டு களுக்கு மேல் ஆறு தலைமுறைகளாக மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாக ஒரே இடத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கிறோம். அதற்கான வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாழ்கிறோம். மேலும் புறம்போக்கு நிலத்தை அகற்றும் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளோம். உரிய இடமும், வீடும் கொடுத்து உரிய அவகாசம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.தியாகராஜன், இமை தீன்ஷா எஸ்.மீனா மற்றும் பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த சிக்குமார், அருள்மணி, சங்கர், தமிழ்செல்வன், வரதராஜன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.