tamilnadu

img

நாராயண குருவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை, அக்.2 - நாராயண குருவிற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாராயண குருவின் சிந்தனை அமைப் பின் சார்பில் ஞாயிறன்று (செப்.29) கேரள சமா ஜத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய  அமைச்சர் கே.என்.நேரு, சென்னை டவு னில் உள்ள ஒரு தெருவிற்கு நாராயண குருவின் பெயரை கருணா நிதி சூட்டினார்.  பெரியாருக்கு உறு துணையாக இருந்தவர் நாராயண குரு. நாராயண குரு கோவில்  கட்டிய போது சிலை வைக்க எதிர்ப்பு எழுந்த நிலையில், நீதி, நேர்மை, தர்மம் என்ற வாசகத்தை பொறித்து வழிபட வைத் தார். நாராயணகுருவுக்கு மணிமண்டபம் கட்ட முறைப்படி கடிதம் கொடுத்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பேரா சிரியர் கருணானந்தம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.