சென்னை,ஜூலை 15- சென்னை விமான நிலையத்தில் 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணி கள் விமானம் புறப்பட தயா ராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென் னையைச் சேர்ந்த பயணி ஒருவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டி கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து பாது காப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.